என் மலர்
நாகப்பட்டினம்
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் உருவானதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் கடல் கடுமையான சீற்றத்துடன் காட்சி அளித்தது. கடும் சீற்றம் காரணமாக நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரை பகுதியில் கடல் நீர் வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
குறைந்த தூரம் சென்று மீன்பிடி தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகிறார்கள். உம்பன் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது பைபர் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் கடை திறக்கப்பட்ட மறுநாளான 8-ந் தேதியே மூடப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காலை முதலே படுஜோராக மது விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
நாகை மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 99 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மதுபானம் விற்பனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பெரும்பாலான கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனையானது. இதனால் அதிக விலை கொண்ட மதுபாட்டில்களே இருப்பு இருந்ததால் அதனை வேறு வழியில்லாமல் மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழதேனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (32) என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜூவின் மைத்துனர் கலையரசன் ஆத்திரம் அடைந்து ஸ்ரீராமை தாக்கினாராம். தடுக்க வந்த அவரின் நண்பர் அலெக்சையும் தாக்கி உள்ளார்.
இது குறித்து நேற்று மாலை சீர்காழி காவல் நிலையத்தில் அலெக்ஸ் புகார் அளித்தார். இந்நிலையில் அலெக்ஸ் தாக்கபட்டது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை ஜீவானந்தம் (45) நேரில் சென்று ராஜூ தரப்பை தட்டிக்கேட்டார்.
ஆத்திரம் அடைந்த ராஜூ, ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். தலைமறைவாகிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் அகஸ்தியன்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அகஸ்தியன்பள்ளியிலிருந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி செல்லும் சாலையில் அடர்ந்த புதர் பகுதியில் கன்னி வலை வைத்து முயல்கள் பிடிக்க முயற்சி செய்த அகஸ்தியன் பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 43), ராசன்(20), கலைச்செல்வம் (20) ஆகிய மூன்று பேரையும் பிடித்து அவர்கள் முயல் பிடிக்க வைத்திருந்த கன்னி வலையையும் கைப்பற்றி அவர்களை கைது செய்து மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி அறிவுரையின் படி 3 பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.






