search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×