search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் அணிந்து ஊழியர்கள் பணியாற்றிய காட்சி.
    X
    முக கவசம் அணிந்து ஊழியர்கள் பணியாற்றிய காட்சி.

    நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்

    நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.
    நாகப்பட்டினம்: 

    கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளை வெளியிட்டு வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக கடந்த 15-ந் தேதி அரசு வெளியிட்ட ஆணையில் 18-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.

    ஏ,பி என்ற இரு பிரிவுகளாக சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்கள் பணியாற்றினர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடி பணியாற்றினர்.
    Next Story
    ×