என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்
Byமாலை மலர்19 May 2020 12:20 PM GMT (Updated: 19 May 2020 12:20 PM GMT)
நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.
நாகப்பட்டினம்:
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளை வெளியிட்டு வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக கடந்த 15-ந் தேதி அரசு வெளியிட்ட ஆணையில் 18-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.
ஏ,பி என்ற இரு பிரிவுகளாக சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்கள் பணியாற்றினர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடி பணியாற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X