என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு
Byமாலை மலர்12 May 2020 11:05 AM GMT (Updated: 12 May 2020 11:05 AM GMT)
சீர்காழி வட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நாகை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து வாகனங்களில் வருவோர்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அவர்களை உரிய இடங்களில் தனிமைப்படுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர், வருவாய்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருவோர்களை மடக்கி அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை கொள்ளிடம் அருகே உள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து பரிசோதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர்களின் விபரங்களையும் பார்வையிட்டார்.
சீர்காழி வட்டாசியர் சாந்தி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், பி.டி.ஓ ஜான்சன், ஒன்றிய பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X