search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம் விற்பனை
    X
    மதுபானம் விற்பனை

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை

    நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் கடை திறக்கப்பட்ட மறுநாளான 8-ந் தேதியே மூடப்பட்டது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காலை முதலே படுஜோராக மது விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    நாகை மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 99 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மதுபானம் விற்பனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    பெரும்பாலான கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனையானது. இதனால் அதிக விலை கொண்ட மதுபாட்டில்களே இருப்பு இருந்ததால் அதனை வேறு வழியில்லாமல் மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். 
    Next Story
    ×