என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை
Byமாலை மலர்18 May 2020 1:41 PM GMT (Updated: 18 May 2020 1:41 PM GMT)
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.
நாகப்பட்டினம்:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் கடை திறக்கப்பட்ட மறுநாளான 8-ந் தேதியே மூடப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காலை முதலே படுஜோராக மது விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
நாகை மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 99 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மதுபானம் விற்பனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பெரும்பாலான கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனையானது. இதனால் அதிக விலை கொண்ட மதுபாட்டில்களே இருப்பு இருந்ததால் அதனை வேறு வழியில்லாமல் மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் கடை திறக்கப்பட்ட மறுநாளான 8-ந் தேதியே மூடப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காலை முதலே படுஜோராக மது விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
நாகை மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 99 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மதுபானம் விற்பனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பெரும்பாலான கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனையானது. இதனால் அதிக விலை கொண்ட மதுபாட்டில்களே இருப்பு இருந்ததால் அதனை வேறு வழியில்லாமல் மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X