என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உம்பன் புயல் எதிரொலி - நாகையில், கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு
Byமாலை மலர்20 May 2020 12:49 PM GMT (Updated: 20 May 2020 12:49 PM GMT)
உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் உருவானதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் கடல் கடுமையான சீற்றத்துடன் காட்சி அளித்தது. கடும் சீற்றம் காரணமாக நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரை பகுதியில் கடல் நீர் வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
குறைந்த தூரம் சென்று மீன்பிடி தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகிறார்கள். உம்பன் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது பைபர் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் உருவானதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் கடல் கடுமையான சீற்றத்துடன் காட்சி அளித்தது. கடும் சீற்றம் காரணமாக நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரை பகுதியில் கடல் நீர் வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
குறைந்த தூரம் சென்று மீன்பிடி தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகிறார்கள். உம்பன் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது பைபர் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X