என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை திறக்க நடவடிக்கை- கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்15 May 2020 5:11 PM GMT (Updated: 15 May 2020 5:11 PM GMT)
முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நாகை கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.
நாகப்பட்டினம்:
முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து, நாகை நகர செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் பிரவீன்நாயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைபிடித்து வருகிறோம். இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் உள்ள முடிதிருத்தும் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது.
கடைகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே உரிய விதிமுறைகளுடன் முடிதிருத்தும் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X