என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழி அருகே மகனை தாக்கியவர்களை தட்டிகேட்ட தந்தை குத்தி கொலை- வாலிபர் கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழதேனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (32) என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜூவின் மைத்துனர் கலையரசன் ஆத்திரம் அடைந்து ஸ்ரீராமை தாக்கினாராம். தடுக்க வந்த அவரின் நண்பர் அலெக்சையும் தாக்கி உள்ளார்.
இது குறித்து நேற்று மாலை சீர்காழி காவல் நிலையத்தில் அலெக்ஸ் புகார் அளித்தார். இந்நிலையில் அலெக்ஸ் தாக்கபட்டது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை ஜீவானந்தம் (45) நேரில் சென்று ராஜூ தரப்பை தட்டிக்கேட்டார்.
ஆத்திரம் அடைந்த ராஜூ, ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். தலைமறைவாகிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்