என் மலர்tooltip icon

    மதுரை

    • அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது42). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால்வண்டியும், அவரது இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் இன்று அதிகாலை விபத்தில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மினி வேனில் கும்பகோணத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். வேனில் 10 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை அருகே உள்ள பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே வேகத்தில் சாலை தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது.

    வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு என்பதால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் மினி வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 16 பேரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்த தால் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    • கேரளாவுக்கு லாரியில் கடத்திய 1,120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகன தணிக்கை சோதனைகளை போலீசார் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சாப்டூர்- பேரையூர் ரோட்டில் மதுரை மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு ஒரு லாரி வந்தது. அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்து பார்த்தனர்.

    அதில் 40 கிலோ கொண்ட 28 மூடைகள் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் லாரியில் கடத்தி வந்த 1120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பாரதிராஜா (வயது 25), அய்யனார்புரம் கனிமாரி (25) என்பது தெரிய வந்தது.

    வில்லாபுரம் பாரதிராஜா ரேசன் அரிசிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக அய்யனார்புரம் டிரைவர் கனிமாரி என்பவரை கூட்டு சேர்த்துக் கொண்டு ரேசன் அரிசியை கடத்தி சென்று விற்று வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து லாரியில் ரேசன் அரிசி கடத்திச் சென்றதாக பாரதிராஜா, கனிமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரையில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போதையின் பிடியில் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

    மதுரையில் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட வருங்கால தலைமுறையை பாதிக்கும் போதைமருந்து கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை முத்துப்பட்டி சுடுகாட்டு பகுதியில் போதை மருந்துகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    பாண்டியன் நகர் சுடுகாடு அருகே 10 பேர் கும்பல் போதை மருந்து, மாத்திரை, ஊசிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி யது. அவர்களில் 2 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பாக்கெட் வலி நிவாரணி மருந்துகள், 5 ஊசி மருந்து, மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்த ஆஷிக்அலி (26), சாலையூர் பக்கீர்மஸ்தான் மகன் சையதுமுகமதுஆஸ்பெக் (19) என்பது தெரியவந்தது.

    வலி நிவாரணி மருந்து, மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்தி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விற்பனை செய்த மேற்கண்ட 2 வாலிபர்களையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.

    மெடிக்கல் கடைகளில் பிரசவ கால வலி நிவாரணியாக சிறப்பு ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை டாக்டரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஒரு சில கும்பல் மருந்து கடைக்காரர்களிடம் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்கண்ட ஊசி மருந்து மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதை மருந்தாக விற்பனை செய்து வருகிறது.

    இதன் அடிப்படையில் மதுரை நகர் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுப்பிரமணியபுரத்தில் போதை மருந்து, மாத்திரைகளுடன் 2 பேரை கைது செய்துள்ளோம். மதுரையில் போதை மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

    • கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.



    மதுரை

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    • குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மூரத்தி வழங்கினார்.
    • வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கூடல்நகரில் உள்ள ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் தனியார் துறையைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வேலை பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி 522 பேரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வான 522 பேருக்கும் தனியார் துறையில் பணி ஆணையை வழங்கினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மண்டல தலைவர், வாசுகி சசி குமார், மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செய லாளர் சசிகுமார்,வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
    • மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதார துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலைய சுகாதார துறை மேற்பார்வையாளர் தங்கச்சாமியின் தலைமையில் சுகாதாரத் துறையினர் மதுரை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை செய்கின்றனர்.

    அரசு அறிவித்துள்ள விதிகளின்படி விமான பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை வரும் வெளிநாட்டு விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் கொரோனா தொற்று இருந்தால் அனைத்து பயணிகள் இருப்பிடத்திற்கு சென்று சுகாதாரத்துறை யினரால் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 187 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று (25-ந்தேதி) கொழும்பில் இருந்து மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்ன கத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.

    இறை வார்த்தை சபை மாநில தலைவர் சாந்து ராஜா தலைமை தாங்கினார். திருத்தல பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை எழுந்தருள செய்து தூபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்மஸ் பாடல்கள், பங்கு இளை யோர் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவ கங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

    நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

    பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    மேலூர்

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×