என் மலர்
மதுரை
- பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஆணையாளர் ராமமூர்த்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமை தாங்கி பேசும்போது, தமிழகத்தில் ஏழை பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. ஆட்சி வந்த 2 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிலையூர் முருகன் (அ.தி.மு.க.): ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணைப்புகளில் தற்போது வரை தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் பல இடங்களில் அவை தரம்இன்றி பழுதாக உள்ளது.
தென்பழஞ்சி சுரேஷ் (தி.மு.க.): கிராமப் பகுதிகளில் சேரும் குப்பைகள் கண்மாய்களிலும் பொது இடங்களிலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மதுரை மாநகராட்சி வெள்ளக்கல் பகுதியில் குப்பைகளை சேகரிப்பது போல திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை ஒரே இடத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் ராமமூர்த்தி பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாடிப்பட்டி
சோழவந்தான் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தனராஜ், பரந்தாமன், தனசேகரன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிரகாஷ், ரகுபதி, முருகவேல் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், ஸ்ரீதர், சரந்தாங்கி முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர் ஆகியோர் பேசினர்.
முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், ராம் மோகன், முரளி, வினோத், தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரவிந்தன், இளைஞர் அணி பேரூர் செயலாளர் ஜி.பி.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
- வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
திருமங்கலம்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்து முக்கிய நிகழ்ச்சியான குருத்தோலை பவனி இன்று நடந்தது. திருமங்கலம் அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்த னையுடன் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கு தந்தை யர்கள், போதகர்கள் மற்றும் சபைகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி திருமங்கலம் நகரில் பவனியாக சென்ற னர். பின்னர் தங்களது தேவாலயங்களுக்கு சென்று குருத்தோலை ஞாயிறு தொடர்பான சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டியில் நடந்த குருத்தோலை பவனி.
ஆர்.சி. தேவாலய பங்கு தந்தை ஜெய் ஜோசப், டி.இ.எல்.சி. சபைகுரு சார்லஸ் ஐசக் ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் ஜான்சன் கார்டார் மற்றும் சபையினர், கிறிஸ்தவர்கள் குருத் தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருத்தோலை பவனி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவா லயத்தில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்தவர்கள் தேவால யத்தில் ஒன்றுகூடி குருத்தோ லைகளை கைகளில் ஏந்திய படி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்திற்கு சபைகுரு அருள்தன ராஜ் தலைமை தாங்கினார். உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். சவேரியார் தெரு, அந்தோணியார் தெருவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கருவாட்டு பேட்டை பகுதியில் இருந்து குருத் தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில், அனைவரும் கலந்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
- பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணின் நகை-பணம் திருட்டு நடந்தது.
- இந்த கும்பலை போலீசார் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலூர்
மேலூர் ஸ்டார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மலர்விழி (42). இவர் சிங்கம்புணரி செல்வதற்காக மேலூர் பஸ் நிலையம் வந்து காத்திருந்தார். இவர் ரூ.8 ஆயிரம், கைச்செயின் ஒரு பவுன் மற்றும் 2 பவுனில் 2 மோதிரங்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஒருமணிபர்சில் வைத்து அதனை கட்டைப்பையில் வைத்துக் கொண்டு வந்தார். பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பின்பக்கமாக வந்து கட்டைபையில் இருந்த பர்சை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலூர் பஸ் நிலையத்தில் இதேபோன்று கட்பைப்பையில் கையை உள்ளே விட்டு திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த கும்பலை போலீசார் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
- கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.
எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம் ஊதிய நிலுவை வழங்கப்பட்டது.
- புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் முத்திரையிடாத தராசுகள் மற்றும் படிக்கற்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. கூடுதல் தொழி லாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் சோதனை நடத்தினர்.
ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், காய்கறி- பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மறு முத்திரையிடாத தராசுகள், தரப்படுத்தாத எடை அளவுகள், மறு பரிசீலனை சான்று வைக்காத 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக பட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 16 நிறுவனங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 15 நிறுவ னங்கள் அரசு நிர்ணயித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதில் 5 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 தொழிலாளர்களுக்கு
ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 283 சம்பள நிலுவைத் தொகை பெற்று தரப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அம லாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தராசுகளை முத்திரையிட, பதிவுச் சான்றுகளைப் பெற labour.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது, 18 வயது முடியாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு. அப்படி கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
குழந்தை தொழிலாளர் குறித்து 1098 அல்லது பென்சில் போர்டல் (PENCIL PORTAL) என்ற இணையதளம் வழியாக புகார் தெரிவிக்கலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது, அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
- கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை நடந்தது.
- முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சியின் அடிப்படை தேவைகளான சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது, பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தனர்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில் திருமங்கலம் நகரின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைத்திடவும், கழிவுநீரை அகற்றிட ரூ.64 லட்சம் செலவில் அதிநவீன வாகனம் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பங்கு சந்தையில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்ததால் ஜெகதீஷ் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டார்.
- வீட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார்.
மதுரை:
அவனியாபுரம் பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். (வயது 39). இவர் மனைவி மணிமாலாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகதீஷ் மேலாளராக வேலை பார்த்தார்.
அப்போது அவருக்கு பங்கு சந்தை முதலீடு பற்றி தெரியவந்தது. அதில் பணத்தை முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று நண்பர்கள் தெரிவித்தனர். எனவே அவர் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தார். இதில் அவருக்கு தொடக்கத்தில் ஓரளவு லாபம் வந்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி அந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.
இந்த நிலையில் பங்கு சந்தையில் திடீரென சரிவு ஏற்பட்டது. ஜெகதீஷ் வாங்கிய பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதையடுத்து ஜெகதீசனுக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர்.
ஏற்கனவே பங்கு சந்தையில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்ததால் ஜெகதீஷ் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டார். மேலும் கடன் கொடுத்தவர்கள் ஜெகதீஷ் வீட்டிற்கு அடிக்கடி சென்று பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த ஜெகதீஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
- 2 சிறுவர்களை சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோசம். இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.
இதனால் கடையை பாதி அளவுக்கு பூட்டி விட்டு கடைக்குள்ளேேய படுத்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் 5 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் சந்தோசத்தின் பெட்டிக் கடைக்குள் சென்று கடையில் இருந்த மிட்டாய்களை திருடி உள்ளனர்.
மற்ற 3 பேரும் கடைக்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். அப்போது திடீரென சந்தோசத்தின் பெட்டிக் கடைக்கு அவரது மகள் வந்தார். அவரை பார்த்ததும் கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
கடைக்குள் மிட்டாய் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். கையும், களவுமாக சிக்கிய அவர் களை, சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
2 சிறுவர்களையும் கல்தூணில் தாக்கி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சிறுவர்களை தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் திருமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.
சிறுவர்களை கட்டி வைத்து தாக்கி மிரட்டியதாக பெட்டிக்கடையின் உரிமை யாளர் சந்தோசம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது மருமகள் பிருந்தாவுடன் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள், பஞ்ச வர்ணம் மற்றும் அவரது மருமகளிடம் காவி உடை அணிந்த 2 பேர் இங்கு வந்தார்களா? என கேட்டு பேச்சு கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
அப்போது அந்த பெண்கள், தங்களது உறவினர் மகளுக்கு இருந்த உடல் பிரச்சினையை காவி உடை அணிந்து வந்த நபர்கள் தீர்த்து வைத்ததாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் மறுநாள் பஞ்சவர்ணமும், அவரது மருமகளும் வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது, முந்தைய தினம் வந்த பெண்கள் கூறியதுபோல் காவி உடை அணிந்து 2 நபர்கள் வந்தனர். அவர்களை பார்த்த பஞ்சவர்ணம், உங்களை பற்றி 2 பெண்கள் கூறியதாக அந்த நபர்களுடன் பேசி உள்ளார்.
அப்போது அந்த நபர்கள், தங்களின் கையை பார்த்து உங்களுக்குள்ள பிரச்சினையை கண்டறிந்து அதற்கு பரிகாரம் செய்து தீர்த்து வைப்போம் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்ச வர்ணம், தனது கையை அந்த நபர்களிடம் காட்டி உள்ளார்.
அப்போது அந்த நபர்கள் உங்களுக்கு உடல் சூடு அதிகமாக இருப்பதாக கூறி அதனை போக்க சாப்பிடு மாறு ஒரு மருந்தை கொடுத்துள்ளனர். இதையடுத்து பஞ்சவர்ணத்தின் மருமகள் பிருந்தாவின் கையை பார்த்து, பொன் (தங்க நகை) தோஷம் இருப்பதாக கூறி உள்ளனர்.
அதனை போக்குவதற்கு வீட்டில் உள்ள நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்சவர்ணம் வீட்டில் இருந்த சில தங்க நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் பரிகார பூஜை செய்ய கேட்ட ரூ.5,500 பணத்தையும் அந்த நபர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
தங்க நகைகள் மற்றும் பணத்தை வாங்கி கொண்ட அந்த மர்ம நபர்கள், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நகைகளை கொண்டு சென்று பூஜை செய்து எடுத்து வருவதாக சென்றுள்ளனர். மேலும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் நகையை வாங்கி சென்ற நபர்கள் வராததால், அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் வெகு நேரமாகியும் அந்த நபர்கள் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பஞ்ச வர்ணம், மீண்டும் போன் செய்தார். ஆனால் அந்த நபர்களின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியதை அறிந்த பஞ்சவர்ணம், அதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது.
- டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தற்போது மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு கிடைக்கும் உறுதி மிக்க மண்ணால் எளிதில் உடையாத வகையில் மண்பாண்ட பொருட்கள் ஆண்டு முழுவதும் தயார் செய்யப்பட்டு வருகிறது .
மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. மானாமதுரையில் குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியிலும் திருப்புவனம், வயல்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது. ஆண்டு முழுவதும் விதவிதமான மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
இதில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கிளியான் சட்டி எனப்படும் தீபவிளக்குகள் ஆகும். அடுத்து மண்பானை மற்றும் கூஜா கோடைகாலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பூஞ்ஜாடிகள், தொட்டிகள் அதிகம் செய்யப்படுகிறது
மண்பானைகள் மட்டுமின்றி களிமண் பொம்மைகள், சரவிளக்குகள், துளசி மாடங்கள், விநாயகர் சிலை, தீப விளக்குகள், கொலு பொம்மைகள், அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், ஊறுகாய் ஜாடி என விதவிதமாக தயாரிக்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மண் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கர்நாடக இசைக்கலைஞர்கள் அதிகமாக பயன்படும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராம் மானாமதுரை மண்கடத்தை ஐ.நா. சபைபில் வாசித்து மானாமதுரைக்கும் ஆதி இசைகருவியான கடத்திற்க்கு புகழ் சேர்த்தார்.
டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.
தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமாகவும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமும் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த மானாமதுரை மண்பாண்டத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மண்பாண்ட தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களை தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிலாளர் சங்க தலைவர் லட்சுமணன் கூறுகையில், களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சேர்த்து தரமான மண்பாண்ட பொருட்களை எங்கள் பகுதியில் செய்து வருகிறோம். தனித்துவம் வாய்ந்த மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அரசு சார்பில் உள்ள வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும், வளர்க்கப்படும் மரகன்றுகளை மண்வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சிறிய பூ தொட்டிகளில் வளர்க்க வேண்டும். இதற்கு அரசு உத்தரவிடவேண்டும்.
முன்பு மானாமதுரை கடத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது புவிசார் குறியீடு கிடைத்தது மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.






