search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம்  ஊதிய நிலுவை வழங்கல்
    X

    22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம் ஊதிய நிலுவை வழங்கல்

    • 22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம் ஊதிய நிலுவை வழங்கப்பட்டது.
    • புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் முத்திரையிடாத தராசுகள் மற்றும் படிக்கற்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. கூடுதல் தொழி லாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் சோதனை நடத்தினர்.

    ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், காய்கறி- பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மறு முத்திரையிடாத தராசுகள், தரப்படுத்தாத எடை அளவுகள், மறு பரிசீலனை சான்று வைக்காத 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக பட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 16 நிறுவனங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 15 நிறுவ னங்கள் அரசு நிர்ணயித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதில் 5 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 தொழிலாளர்களுக்கு

    ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 283 சம்பள நிலுவைத் தொகை பெற்று தரப்பட்டது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அம லாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தராசுகளை முத்திரையிட, பதிவுச் சான்றுகளைப் பெற labour.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது, 18 வயது முடியாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு. அப்படி கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

    குழந்தை தொழிலாளர் குறித்து 1098 அல்லது பென்சில் போர்டல் (PENCIL PORTAL) என்ற இணையதளம் வழியாக புகார் தெரிவிக்கலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது, அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    Next Story
    ×