search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Management"

    • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், உட்கட்சி வேற்றுமையை மறந்து வரும் தேர்தலில் அனை வரும் பொறுப்பாளராக செயல்பட வேண்டும். மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் தங்களுக்குரிய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். செயல்படாத நிர்வாகிகள் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாளபட்டி சேர்மன் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் சுபைதா அப்பாஸ், தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், இளைஞர் அணி அமைப்பாளர் அழகுபாண்டி, வேலூர் யூனியன் துணை சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, பழனி வல்லாளப்பட்டி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாடிப்பட்டி

    சோழவந்தான் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தனராஜ், பரந்தாமன், தனசேகரன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிரகாஷ், ரகுபதி, முருகவேல் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், ஸ்ரீதர், சரந்தாங்கி முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், ராம் மோகன், முரளி, வினோத், தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரவிந்தன், இளைஞர் அணி பேரூர் செயலாளர் ஜி.பி.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×