search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாடிப்பட்டி

    சோழவந்தான் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தனராஜ், பரந்தாமன், தனசேகரன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிரகாஷ், ரகுபதி, முருகவேல் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், ஸ்ரீதர், சரந்தாங்கி முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், ராம் மோகன், முரளி, வினோத், தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரவிந்தன், இளைஞர் அணி பேரூர் செயலாளர் ஜி.பி.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×