என் மலர்tooltip icon

    மதுரை

    • ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.

    • தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்படுவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வக்கீல் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.

    மேலூர் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றிற்காக பொதுமக்களை அலைகழிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர், தாலுகா குழு உறுப்பினர் பெரியவர், மாவட்ட குழு உறுப்பினர் திலகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலையை மதுரை நிர்வாகிகள் அணிவித்தனர்.
    • 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பலத்தினை நிரூபிக்கின்ற வகையில் திருச்சி ஜி கார்னர் மைதா னத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ெஜயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. வின் 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார். மாநாடுபோல் நடந்த இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் திறந்த வாகனத்தில் வந்தார். அப்போது அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால் விழா ேமடைக்கு ஓ.பன்னீர் செல்வம் வர தாமதமானது.

    அவர் மேடை ஏறியவுடன் மதுரை நிர்வாகிகள் இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ் மோகன், மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன், முருகேசன் ஆகியோர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆட்டோ கருப் பையா, கண்ணன், கொம் பையா, கிரி, கருந்த பாண்டி, பாரப்பத்தி ஊராட்சி தலை வர் முத்தையா, கமலக் கண்ணன் ஓம் ஜெயபிரகாஷ், ரமேஷ், ஆட்டோ முத்துராம லிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    மதுரை

    மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் கூட்டியது தி.மு.க. பினாமி மாநாடு என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    1½ கோடி தொண்டர்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறுவடிவமாக திகழ்கிறார். நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர்.அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையமும் எடப்பாடியார் பொதுச் செயலாளர் ஆனது செல்லும் என்று தீர்ப்பு வந்த பிறகும் கூட அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி திருச்சியில் மாநாட்டை நடத்தினார்கள். எதற்காக இந்த மாநாடு?. அ.தி.மு.க.வில் எந்த தொண்டனும் தி.மு.க. என்பது தீய சக்தி என்று தான் கூறுவார்கள். தி.மு.க.வின் அவலங்களை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கு தோல்உரித்து காட்டினர்.

    அ.தி.மு.க.வின் உடம்பில் ஓடும் உண்மையான ரத்தம் என்றால் தி.மு.க.வை தோல்உரித்து காட்டுவது தான். அதுதான் அ.தி.மு.க.வின் இலக்கணமாகும். ஆனால் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு மருந்திற்கு கூட தி.மு.க. அரசை விமர்சிக்காமல் திருச்சியில் மாநாட்டை சிலர் நடத்தினர்.

    51 ஆண்டுகால அ.தி.மு.க. வரலாற்றில் இதுபோல் நடந்தது கிடையாது. இவர்களது உண்மையான சுயரூபம் தெரிந்து விட்டது.கடந்த 2 ஆண்டுகளில் அம்மா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அதைப்பற்றி வாய் கூட திறக்கவில்லை. தி.மு.க.வின் கைக்கூலியாக மாறிவிட்டனர்.

    அங்கே தி.மு.க. பிரதிநிதி போல வந்து கலந்து கொண்டனர். தி.மு.க. பினாமி மாநாடு போல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ரூ.25 கோடியை செலவழித்து ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் எடப்பாடி யாரை கடுமையாக வசைப்பாடி உள்ளனர். யார் தூண்டுதலால் நடத்தினர் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது.

    வருகிற ஆகஸ்ட் 20 -ந்தேதி மதுரையில் நடை பெறும் மாநாட்டை நாடே திரும்பி பார்க்கும் வகையில் எடப்பாடியார் நடத்தி காண்பிப்பார். தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.ஆனால் தற்போது ரூ.31ஆயிரம் கோடி வரை ஊழல் செய்து சம்பாதித்து விட்டனர். இதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை என்று நிதி அமைச்சர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டார். இதற்கு உண்மையான விசாரணை செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை அருகே புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தற்கொலை செய்துெகாண்டனர்.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அனுப்பானடி, மேல தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (36). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவரது மகன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்தார். அப்போது முதல் வாசுதேவன் யாருடனும் பேசாமல் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    மகபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்த கண்ணன் மகன் பிரவீன் (23). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பிரவீன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    கோசாகுளம் அருண் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (65). இவருக்கு மகன் சரவணகுமார் உள்ளார். இவருக்கு உறவினர்கள் நீண்ட காலமாக மணப்பெண் தேடி வந்தனர். சரியாக வரன் அமையவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியப்பன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    • தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தென் மாவட்ட அளவில் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஐ.எஸ்.எம். நிறுவனம் சார்பில் மதுரையில் நடந்தது. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங் களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனோகரிதாஸ் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தனித்து வாழும் பெண்கள் நலவாரிய உறுப்பினர் கிளாரா கலந்து கொண்டு பேசுகையில், தனித்து வாழும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி, கல்விக் கேற்ற வேலை வாய்ப்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜீவானந்தம், செல்வகுமார், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தனித்து வாழும் பெண்க ளுக்கான நலவாரியத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும் என கருத்த ரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முன்னதாக தனித்து வாழும் பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை கிளாரா வெளியிட மனோகரிதாஸ் பெற்று கொண்டார்.மாக்ஸின் வரவேற்றார். கஸ்தூரி நன்றி கூறினார்.

    • மதுரை மேலக்கால் பகுதியில் இரவு நேர மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் கிராம பகுதிகளில் தற்போது இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் முதியோர், குழந்தைகள், பெண்கள் அவதிப்படுகின்றனர்.

    பள்ளி, கல்லூரி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோன்று இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மின்விநியோகம் சீராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற இரவு நேர மின்தடை ஏன் ஏற்படுகிறது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மேலும் கோடை காலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற நிலையில் சீரான மின் விநியோகத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

    எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலக்கால் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    • 5-ந் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

    அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம் 4-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில், கள்ளழகரின் எதிர்சேவை நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை வரை தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்சேவை நடக்கிறது.

    5-ந் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    மதுரையில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது 2 பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். நடப்பாண்டு சித்திரை திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    பக்தர்கள் வருகை, வாகன நிறுத்தம், வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு, விழா மேடை அமைப்பு, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு போல எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வருகிற 30-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கி ணைந்து செயல்படுத்தும் என்றார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
    • வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பேசினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் படித்த

    600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள். அதிக மாக புத்தகங்களை படியுங்கள் என்பதுதான். வரலாற்று புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்க்கை முறை தெளிவாகும். வீட்டி லும், வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள்.

    தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும். பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.

    நானும் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களி டம் இருக்க வேண்டும்.

    வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள். மாணவ செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

    யோகா பயிற்சியை தினமும் செய்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறலாம். யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும். நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்ய முயற்சியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை அதிகாரி, செயலாளர் ஷகிலா ஷா முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    முடிவில் முதல்வர் வெண்ணிலா நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் நவராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அருணாசலேஸ்வர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள பச்சைநாயகியம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடாகி சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் ஊற்றி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமிக்கும்-அம்பாளுக்கும் 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தனர்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அருணாசல ஈஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெகதீசன், செந்தில்குமார், ராஜேஷ் கண்ணா, கணக்கர் சிவகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
    • கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

    ×