என் மலர்tooltip icon

    மதுரை

    • ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாழை இலைகளின் பார்சல் செய்து கொடுத்த பல ஓட்டல்களில் தற்போது பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    இதேபோல் சாம்பார் உள்ளிட்ட குழம்பு மற்றும் டீ, காபி ஆகியவையும் பிளாஸ்டிக் கவர்களில் தான் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் மனிதர்க ளுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரங் களை மேற்கொள்ளும் நிலையில் எங்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்கப்படா ததால், அவைகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பல ஓட்டல்களில் நல்ல குடிநீரும் கொடுப்ப தில்லை. கேன் தண்ணீர் வழங்காமல் ஆர்.ஓ. வாட்டர் என்று எதையோ கொடுக்கின்றனர். பாட்டில் தண்ணீருக்கும் விலை வைத்து தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

    எனவே ஓட்டலில் சாப்பிடும் மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவதில்லை. அவைகளை கவனிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    • பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம். இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதிதாக கட்டுவ தற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்து இந்த கோவிலை கட்டும் பணியை ெதாடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு கோவில் ட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளை ஞர்கள் துபாய் நாட்டில் கம்பி கட்டுதல், கொத்தனார் வேலை, கார்பெண்டர் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த தொழி லுக்கு பணியாட்களாக சென்று வேலை பார்த்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் கிராம மேம்பாட்டிற்கு உதவுவ தற்காக அவர்கள் பணியில் இருந்த 2004-ம் ஆண்டு முதல் 19 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ரூ.115 வீதம் சேமிக்க முடிவு செய்த னர். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து, தங்களது பங்கிற்கான தொகையினை யும் கொடுத்து சேமித்து வந்தனர்.

    இவ்வாறு சேமித்த பணம் ரூ.30 லட்சத்தை தாண்டியது. இதனை தொடர்ந்து தங்களது கிராமத்தில் உள்ள கோவிலை சிறப்பாக கட்டி கும்பாபிஷேகம் நடத்துவ தற்கு நிதி உதவி செய்ய துபாய் வாழ் இளைஞர்கள் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கோவில் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், கிராமத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க ரூ.8 லட்சம் என பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் வழங்கினர். அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

    இதுபற்றி அந்த இளைஞர்கள் கூறுகையில், ேகாவில் திருப்பணி மற்றும் கிராம மேம்பாட்டுக்கு உதவி செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தொடர்ந்து இதுபோல் சேமித்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது62). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் பணியின் போது தர்மஸ்தான பட்டியில் ராமன் வாடகைக்கு வீடு எடுத்தி தங்கியிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜெயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ஜெயாவின் கணவர் கிருஷ்ணன் பழக்கத்தை கைவிடுமாறு ராமனை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுப்பையா, கண்ணன் ஆகியோர் ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று இரவு ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சீதாராமன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதுபோன்ற செயல்களை தடுக்க போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
    • தனது பலத்தை நிரூபிப்பதற்காக ஆட்களை கூட்டி வாளால் கேக் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் அண்மை காலமாக பிறந்தநாள் விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தரவர்கத்தினரும் பிறந்தநாள் விழாக்களை மண்டபத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள்.

    அப்போது உற்சாக பெருக்கத்தில் இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேக் வெட்டுவதற்கு அரிவாள், வாள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

    தங்கள் பகுதிகளில் 'கெத்து' காட்டுவதற்காக பிறந்தநாள் விழாக்களில் இதுபோன்ற அடாவடி செயல்களில் சிலர் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இதில் கட்சி பிரமுகர்கள், ரவுடிகளும் அடங்குவர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற செயல்களை தடுக்க போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் கட்சி பிரமுகர் பிறந்தநாள் விழாவின் போது தனது பலத்தை நிரூபிப்பதற்காக ஆட்களை கூட்டி வாளால் கேக் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள இவர். தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டார். அதற்காக அந்த பகுதி முழுவதும் தனது ஆதரவாளர்களை வைத்து பிளக்ஸ், போஸ்டர் மூலம் ஒட்டினார்.

    சம்பவத்தன்று அங்குள்ள திருமண மண்டபத்தில் முத்துமணியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்திருந்த முத்துமணி, அவர்களது முன்னிலையில் பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டி கொண்டாடினார்.

    அப்போது ஆட்டம், பாட்டத்துடன் அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டு வாழ்த்தினர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சிலர் நடந்து கொண்டனர். வாளால் முத்துமணி பிறந்தநாள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையடுத்து விழித்துக் கொண்ட போலீசார், முத்துமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    • புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

    மதுரை

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

    கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

    ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

    தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும்.

    முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடி வாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.

    அ.தி.மு.க.விற்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.

    கள்ளச்சாராயம் என்பது இந்தியாவிலே எங்கும் இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அவலம் உள்ளது.

    கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப் பட்டிருக்கிற அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படி கொடுப்பது முறையான நிர்வாகமா?.

    நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு ஐ.ஜி.யிடம் வழங்கப்பட்டது.
    • வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    மதுரை

    கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழு வதும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி னர்.

    இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஜல்லிக்கட்டு வழக்கு முறி யடிப்பு குழுவினர் மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்

    ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் மற்றும் சாமா னியர்கள். அவர்களால் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள முடியாத பொருளாதார நிலை இருப்பதால் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் ரோந்து பணியில் ஈடுபட்டார். பத்திர காளியம்மன் கோவில் தெரு தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை மடக்கினார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கீரைத்துரை வேத பிள்ளை தெருவை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாளிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள்? எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை புதூர் கணேசபுரம் தெருவை சேர்ந்த சீனி முத்தையா மகன் ராஜு (54). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜுவிடம் கூறியுள்ளார்.

    இதற்காக 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.65லட்சம் பெற்றார். வாக்குறுதி அளித்தபடி ராஜுவுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது தராமல் ஏமாற்றினார்.

    இது குறித்து ராஜு புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மேல பொன்ன கரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) என தெரியவந்தது. இதை யடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்த னர்.

    அண்ணா பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக நின்று கொண்டி ருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 10-வது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 200-ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு நள்ளிரவு வரும் பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    மாட்டுத்தாவணி, பெரி யார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் சமூக விரோதிகள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்ற னர். இதனால் வெளியூர்க ளில் இருந்து நள்ளிரவு ஊர் திரும்புபவர்கள் பீதியுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×