search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்கள்
    X

    கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்கள்

    • கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    • பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம். இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதிதாக கட்டுவ தற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்து இந்த கோவிலை கட்டும் பணியை ெதாடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு கோவில் ட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளை ஞர்கள் துபாய் நாட்டில் கம்பி கட்டுதல், கொத்தனார் வேலை, கார்பெண்டர் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த தொழி லுக்கு பணியாட்களாக சென்று வேலை பார்த்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் கிராம மேம்பாட்டிற்கு உதவுவ தற்காக அவர்கள் பணியில் இருந்த 2004-ம் ஆண்டு முதல் 19 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ரூ.115 வீதம் சேமிக்க முடிவு செய்த னர். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து, தங்களது பங்கிற்கான தொகையினை யும் கொடுத்து சேமித்து வந்தனர்.

    இவ்வாறு சேமித்த பணம் ரூ.30 லட்சத்தை தாண்டியது. இதனை தொடர்ந்து தங்களது கிராமத்தில் உள்ள கோவிலை சிறப்பாக கட்டி கும்பாபிஷேகம் நடத்துவ தற்கு நிதி உதவி செய்ய துபாய் வாழ் இளைஞர்கள் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கோவில் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், கிராமத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க ரூ.8 லட்சம் என பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் வழங்கினர். அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

    இதுபற்றி அந்த இளைஞர்கள் கூறுகையில், ேகாவில் திருப்பணி மற்றும் கிராம மேம்பாட்டுக்கு உதவி செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தொடர்ந்து இதுபோல் சேமித்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×