search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி
    X

    வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி

    • வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை புதூர் கணேசபுரம் தெருவை சேர்ந்த சீனி முத்தையா மகன் ராஜு (54). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜுவிடம் கூறியுள்ளார்.

    இதற்காக 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.65லட்சம் பெற்றார். வாக்குறுதி அளித்தபடி ராஜுவுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது தராமல் ஏமாற்றினார்.

    இது குறித்து ராஜு புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×