என் மலர்
மதுரை
- வாலிபர்களுக்கு கத்திக்குத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
பழங்காநத்தம் உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சிவகுரு 19. ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும், ஆதிமூலத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் 2-வது தெரு அருகே சிவகுரு சென்று கொண்டி ருந்தார். அப்போது ராஜா உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சிவகுருவை அவதூறாக பேசி கத்தியால் குத்தி யுள்ளனர். இதுகுறித்து சிவகுரு எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்நாடு கஞ்சிமணி மகன் வேல்முருகன் (வயது21) என்பவரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மதன், கருணாமூர்த்தி, கருப்பு, ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
- தர விதிமுறைகளை பின்பற்றாத 116 உணவகங்களுக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது.
- தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகிறது. இதில் சில உணவகங்களில் தரமற்ற, கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது, கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலை யில் உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 658 உணவகங்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 48 உணவ கங்கள் விதிமுறைகளின் படி இயங்கவில்லை என தெரியவந்தது. அந்த உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் உணவகம் அல்லாத பேக்கரி, தேநீர் கடைகள், பலகாரக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. விதிகளின் படி இயங்காத 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிக ளின்படி இயங்காத அல்லது புகாரு க்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதேபோன்று உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டு புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
- தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.
அலங்காநல்லூர்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- நடைபயணத்தில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
சோழவந்தான்
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு வரு கிறார். நேற்று மாலை மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கினார். சோழவந்தானில் எம். வி. எம். மருது மஹால் அருகே பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளிமயில் சிவகாமி, தொழிலாளர் அணி ராஜா ராம் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். நடை பய ணத்தின் போது அண்ணா மலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொறுத்தவரை பட்டு. அதன்படி சோழ வந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.
அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி.உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன் படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரிய வில்லை. அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திர பதிவு துறையில் ஊழல் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நடைபயணத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மாநில ஊடகத்துறை தலைவர் ரங்காஜி, ஓ.பி.சி. அணிமுன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி, மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொரு ளாளர் முத்துராமன், வாடிப்பட்டி கண்ணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்.
- திருமங்கலம் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்தகூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி னர்.
செக்கானூரணி பகுதிக்கு மின் மயானம் வேண்டாம். மயானம் செல்வதற்கான பாதை பட்டா இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்ததாக கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் தெரி வித்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கான பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வாகைகுளம் கவுன்சிலர் மின்னல் கொடி ஆண்டிச்சாமி கூறுகையில், வாகைகுளத்தில் உள்ள சுகாதார மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கொக்குளம் கவுன்சிலர் சிவபாண்டி பேசும்போது, மதுரை-போடி ரெயில் செல்லும் வழியில், செக்கானூரணியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவ ரெயில்வே நிலையம் இருந்தது. தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் கருமாத்தூர் ஆகிய 2 பகுதிகளிலும் புதிய ரெயில் நிலையங்கள் தொடங்கப் பட்டுள்ளது. எனவே செக்கானூர ணியிலும் ரெயில் நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
சாத்தக்குடி ஒன்றிய கவுன்சிலர் பரமன் பேசுகையில், சாத்தங்குடி கிராம பகுதியில் சாக்கடை தூர்வாறுவது இல்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை. வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப் படாமல் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் இதை சரி செய்ய வேண்டும் என்ன பேசினார்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி மற்றும் உச்சப்பட்டி செல்வம் ஆகியோர் பேசுகையில், மாநகராட்சி நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் அரசு அறிவித்துள் ளது. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியன், சங்கர்கைலாசம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திருவிளக்கு பூஜையில் மாணவிகள் பங்கேற்றனர்.
- மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலனுக் காக ஆடி வெள்ளியை யொட்டி 1,008 திருவிளக்கு பூஜை அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். கல்லூரி தலைவர் ராஜ கோபால், உதவி தலைவர் ஜெயராம், கல்லூரி செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) பிரபு, அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப் பாளராக மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து 1,008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தலைமையில் கல்லூரி மாணவிகள், பேரா சிரியைகள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். விழாஏற்பாட்டினை கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை விஷ்ணு சுபா, தமிழ்துறை உதவி பேராசிரியை பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.
- அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.
- எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.
மதுரை:
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்ததால் அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி மட்டும் தான். அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு பேசுகின்ற நபர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது:-
பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார்.
அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.
என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளைநான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்.
தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி.
- அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சோழவந்தான்:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொருத்தவரை பட்டு. அதன்படி சோழவந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.
அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி. உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன்படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரியவில்லை. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திரப்பதிவு துறையில் நூதன முறையில் ஊழல் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் நேர்மையான, மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான்.
- நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் செந்தில்பாலாஜி.
மதுரை:
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ''என் மண்-என் மக்கள்'' பாதயாத்திரை நேற்று மதுரை மாவட்டத்தை அடைந்தது. நேற்று மேலூர் அரசு கலைக்கல்லூரியில் பாதயாத்திரை தொடங்கியது. அண்ணாமலைக்கு மேள-தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்தைப்பேட்டை, பெரிய கடை வீதி வழியாக மேலூர் பஸ் நிலையம் வந்தடைந்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக மக்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆனால், திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம். தி.மு.க. கூறும் பொய்களை தோலுரித்து காட்டிவருகிறோம்.
தமிழகத்தில் நேர்மையான, மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான். ஆனால், தற்போதுள்ள அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவர்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் செந்தில்பாலாஜி. அப்படி என்றால் அரசு டாக்டர்களும், அரசு மருத்துவமனையும் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், கக்கன் வாழ்நாள் முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை பெற்றார்.
செந்தில் பாலாஜியை போல் அமைச்சர் மூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
என் குலதெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன.
- இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்களை பங்கேற்க செய்ய அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக பணியாற்றும் படி மாவட்ட செயலாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்தது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் தொண்டர்களை மதுரை மாநாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை மாநாட்டில் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் சந்திப்பில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகளும் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்குவது குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான 10 ஆயிரம் நபர்களுக்கு ஒரு கவுண்டர் வீதம் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கவும், நடமாடும் கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன. இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக நடைபெறும் மாநாடு என்பதால் இந்த மாநாட்டை சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடத்தி காட்ட அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். மாநாட்டில் 20-ந்தேதி காலை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடி ஏற்றி வைக்கிறார். மாலை 5 மணி அளவில் மாநாட்டு திடலில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாநாட்டில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது.
மாநாட்டுக்கு தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நான்கு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட உள்ளது.
எனவே மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் அமையும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
- உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், வரதராஜன் கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013ல் சிவில் பிரச்சினை இருந்தது.
இந்த விவகாரத்தில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம், காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதற்கு 4 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அப்போது நடந்த இரட்டை கொலையில் 4 பேரையும் சேர்த்துள்ளார். இதனால் வரதராஜன், கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்துள்ளார். இதற்காக இழப்பீடும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கையும் கோரி 4 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இறந்ததால், அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:-
மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் கேள்வியாக உள்ளது. எனவே, அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.
வரதராஜன் கடலை முத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் நாளொன்றுக்கு ரூ. 7500 வீதம் தலா ரு. 6.90 லட்சமும். பரமசிவம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500ம் இழப்பீடு பெற தகுதி உள்ளது.
இதை உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.
- ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி 87-வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. கவுன்சிலர் காளிதாசிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக அவர் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புதிய சாலை அமைக்க வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் அரசு நிதியாக ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி இன்று நாகம்மா கோவில் தெரு, சமயபுரம் கோவில் தெரு, அண்ணாமலையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணி யினை 87-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலரின் முயற்சி யால் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதை வார்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் சுபாஷ் ஸ்ரீ மற்றும் ராஜா, சண்முகநாதன், ராம்ராஜ், சங்கர், பஞ்ச வர்ணம். மேகலா. செல்வி, ராஜா. ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






