search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notices"

    • தர விதிமுறைகளை பின்பற்றாத 116 உணவகங்களுக்கு நோட்டீசு அனுப்பட்டுள்ளது.
    • தரமற்ற உணவு விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகிறது. இதில் சில உணவகங்களில் தரமற்ற, கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவது, கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலை யில் உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 658 உணவகங்களில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 48 உணவ கங்கள் விதிமுறைகளின் படி இயங்கவில்லை என தெரியவந்தது. அந்த உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.

    மேலும் உணவகம் அல்லாத பேக்கரி, தேநீர் கடைகள், பலகாரக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. விதிகளின் படி இயங்காத 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதத்தில் 656 உணவகங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிக ளின்படி இயங்காத அல்லது புகாரு க்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதேபோன்று உணவகம் அல்லாத 752 கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டு புகாருக்குள்ளான 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

    வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #jactogeo
    வேலூர்:

    வேலூர் மாவட்ட அரசு, தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள 18,200 ஆசிரியர்களில் 8,100 பேர் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 6000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை நீடித்தது. இதனால் பல இடங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதையடுத்து காலை முதலே ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

    அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் 39 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பாதது தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி வரை பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விவரம் பெறப்பட்டது. இதில் 39 ஆசிரியர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதையடுத்து அந்த 39 ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் பணியில் சேர இயலாது என்றார். #jactogeo

    வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் மும்பை கோர்ட்டு பொது நோட்டீஸ் வெளியிட்டது. #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் விசாரணை மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.



    இந்த நிலையில் இந்திய வங்கிகளில் இருந்து கோடிக் கணக்கில் கடன்பெற்று மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

    ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018’ எனப்படும் இந்த சட்டப்படி, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரை, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள்’ என அறிவித்து, அவர்களின் பினாமி சொத்துகள் உள்பட அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.

    தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பர்வி மோடி, சகோதரர் நீஷல் மோடி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் எதிராக மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஆஷ்மி தனித்தனியாக பொது நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். இந்த பொது நோட்டீஸ்கள் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் பர்வி மற்றும் நீஷல் ஆகியோருக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீசில், ‘உங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருந்த சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?’ எனக்கேள்வி கேட்டு இருந்த கோர்ட்டு, இது தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைப்போல நிரவ் மோடிக்கு எதிரான நோட்டீசில், ‘நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது மட்டுமின்றி, விசாரணைக்கும் ஆஜராக மறுத்து வருகிறீர் கள். எனவே மேற்படி சட்டத் தின் கீழ் நீங்கள் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என அழைக்கப்படுவீர்கள்’ என கூறப்பட்டு இருந்தது.

    அமலாக்கத்துறை கோரியிருந்தது போல உங்களை ஏன் தப்பி ஓடிய குற்றவாளி என அறிவிக்கக்கூடாது? என்றும், உங்கள் சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்றும் செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.#PNBFraud #NiravModi  #Tamilnews
    ×