search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்களுக்கு கத்திக்குத்து
    X

    வாலிபர்களுக்கு கத்திக்குத்து

    • வாலிபர்களுக்கு கத்திக்குத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம் உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சிவகுரு 19. ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும், ஆதிமூலத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் 2-வது தெரு அருகே சிவகுரு சென்று கொண்டி ருந்தார். அப்போது ராஜா உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சிவகுருவை அவதூறாக பேசி கத்தியால் குத்தி யுள்ளனர். இதுகுறித்து சிவகுரு எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்நாடு கஞ்சிமணி மகன் வேல்முருகன் (வயது21) என்பவரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மதன், கருணாமூர்த்தி, கருப்பு, ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    Next Story
    ×