என் மலர்tooltip icon

    மதுரை

    • இணைப்பு குழாய் உடைந்து வயல்களுக்குள் ஓடி குடிநீர் வீணாகிறது.
    • எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து மன்னாடி மங்கலம்-காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. காடு பட்டி பகுதியில் இந்த குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    தற்போது தென்கரை கண்மாய் செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வயல்களுக்குள் சென்று வீணாகி வருகிறது. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் குடிநீர் வீணாக வயல்களுக்குள் புகுவதால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளி யேறி வீணாகி வருகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இரும்பாடி முதல் திருமங்கலம் வரை குழாய்களின் இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சிறிய உடைப்புகளை சரி செய்து மீண்டும் உடைப்பு ஏற்படா மல் இருக்கவும், குடிநீர் வீணாக வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    1972-ம் ஆண்டு தமிழ் நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் மற்றும் தோட்ட நிறுவ னங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங் களில் பணிபுரியும் தொழி லாளர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறு வனத்தின் பங்காக ஒவ் வொரு தொழி லாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழி லாளர் களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரிய த்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2024-க்குள் செலுத்த வேண்டும்.

    அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழி லாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங் களுக்கு தொழி லாளர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay+ DA) ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும்.

    விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்யப்பட்ட விண்ணப் பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்து உள்ளார்.

    • ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
    • கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன குடோனில் ரூ.30 ஆயிரம் டீத்தூள் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தென் பாலமுருகன், ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணி ராஜசேகர் (வயது 68). இவர் மதுரை பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சியின் குடோன் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 18 வருடங்களாக இந்த குடோனின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இங்கு பல்வேறு பலசரக்கு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடோனை பூட்டிவிட்டு சேவியர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வேலைக்கு வந்தபோது குடோன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த சேவியர் உள்ளே சென்று பொருட்களை சரிபார்த்தபோது ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள டீ-காபி தூள் பாக்கெட்டுகள். திருடப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் வேலை பார்த்த நீக்கப்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி மூக்கன் மகன் தென் பாலமுருகன் (23) சுவர் ஏறி குதித்து திருடிச்சென்றது ப திவாகி இருந்தது.அவருடன் அய்யர் பங்களா காவேரி 8-வது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஹரிஹரன் (19) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தென் பாலமுருகன், ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள மொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது44). இவரது உறவினர் சூரியா(33). கடந்த 2002-ம் ஆண்டு அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மதுரைக்கு பாரபத்தி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அங்குள்ள கியாஸ் கம்பெனி அருகே பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை முந்தி அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

    இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலி பர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.

    மதுரை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

    குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.

    எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
    • தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றியுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விளாங்குடி 1-வது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வட்ட செயலாளர் மலைச்சாமி தனது குடும்ப உறுப்பினர்கள் 30 பேருடன் வந்தார். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சினேகபிரியா மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மலைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தி னரை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மலைச்சாமி கூறுகையில், விளாங்குடி பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மேலும் நாங்கள் வளர்த்து வரும் மரங்கள் மற்றும் இடத்திற்கு உரிய வரி செலுத்தி வருகிறேன். ஆனால் தற்போது நீர்நிலை தொட்டி கட்டுவதாக கூறி இடத்தை கையகப்படுத்தி மரத்தையும் வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

    இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சம்பவத்தன்று போலீசார் எனது வீட்டுக்கு வந்து வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி யுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

    • மதுரையில் காப்பகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியானான்.
    • இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சிட்டம்பட்டி அருகே உள்ள கத்தப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். கட்டிட தொழிலாளியான இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு பேசும் திறன் குறைந்திருந்தது. இதன் காரணமாக 2 மகன்களையும் மதுைர டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள மனநலம் குன்றியோர் காப்பகத்தில் மீனாட்சி சுந்தரம் சேர்த்தார். அங்கு காப்பக ஊழியர்கள் 2 பேரையும் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று காப்பகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து லட்சுமணன் இறந்து விட்டதாக தந்தை மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவ இடத்திற்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதில் காப்பக நிர்வாகத்தில் கவனக்குறைவு தான் தன் மகன் சாவிற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

    தண்ணீர் தொட்டியை மூடாமல் காப்பக நிர்வாகிகள் அலட்சியமாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் அருகே அய்வத்தான்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் ஊராட்சி அய்வத் தான்பட்டி கிராமத்தில் உள்ள அய்வத்தான் கண் மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மேலூர் மற்றும் கொட்டாம் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பொது மக்கள் மீன்பிடி உபகர ணங்களான வலை, கச்சா, ஊத்தா ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்திருந்தனர்.



    பிடிப்பட்ட மீனுடன் வாலிபர்கள்.

    பின் அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வழிபட்டு பின் கண்மாய் கரையில் வெள்ளை கொடி வீசி யதை தொடர்ந்து தயாராக நின்ற பொதுமக்கள் கண் மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து சென்ற னர். இந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வீதம் வரை நாட்டு வகை மீன் களான கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கன.

    இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பதை கடை பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழித்து மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

    இந்த மீன்பிடித் திரு விழாவின்போது பெண் ஒருவர் பிடித்த மீன் வலையில் திடீரென பாம்பு ஒன்று அகப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் மன்னாடி மங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன் சிலர் அகிலா ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செய லாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

    திருவேடத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    திருவேடகம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி முள்ளிப் பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பாண்டியம்மாள், மன்னாடிமங்கலம் கிரா மத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை கிராமத்தில் மகளிரணி வனிதா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×