search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் மன்னாடி மங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன் சிலர் அகிலா ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செய லாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

    திருவேடத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    திருவேடகம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி முள்ளிப் பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பாண்டியம்மாள், மன்னாடிமங்கலம் கிரா மத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை கிராமத்தில் மகளிரணி வனிதா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×