என் மலர்tooltip icon

    மதுரை

    • பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
    • இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பாலாலய பூஜைகள் நடந்தது.
    • நாளை காலை தொடங்குகிறது.

    மதுரை

    மதுரை மாநகரின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம் எதிரில் தெற்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள் ளது பிரசித்தி பெற்ற இம் மையிலும் நன்மை தருவார் கோவில். கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும், பார்வதியும் லிங் கத்திற்கு பூஜைகள் செய்யு மாறு மேற்கு நோக்கி காட்சி தருகிறார்கள்.

    பூலோக கைலாயம் என்று போற்றப்படும் இந்த கோவிலை சிவகங்கை சமஸ் தான தேவஸ்தானம் நிர்வ கித்து வருகிறது. இங்கு மூல வராக சொக்கநாதரும், அம்பாள் மத்தியபுரி நாயகியும், உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தரும் இருந்து அருள்பாலித்து வருகின்ற னர்.

    இந்த கோவிலில் பல் வேறு உற்சவங்கள், வைபவங்கள், பிரதோஷ விழா, ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இதற்கிடையே கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.

    அதன் தொடர்ச்சியாக பாலஸ்தான கும்பாபிஷேகம் எனப்படும் பாலாலய பூஜை கள் நாளை (23-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கு கிறது. அன்றைய தினம் காலை 10.32 மணி முதல் 11 மணிக்குள் மகர லக்னத்தில் பாஸ்தாபன கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    முன்னதாக நாளை (22-ந்தேதி, புதன்கிழமை) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ் யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், விமானங்கள் கலாகர்ஷ–ணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    23-ந்தேதி காைல 7.35 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாவாசனம், இரண்டாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, 10 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபா ராதனை, கடங்கள் புறப்பா டும், 10.32 முதல் 11 மணி வரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் விமானங்கள் பாலஸ்தாபன மஹா கும்ாபிஷேகம், மகா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயா முதல்வர் எஸ்.கே.ராஜா பட்டர், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் ஸ்தானிகம் சி.ஹாலாஸ்ய நாத பட்டர், ஸ்தல அர்ச்சகர் எஸ்.தர்மராஜ் சிவம், கண் ணாணிப்பாளர் எஸ்.கணபதி ராமன், கவுரவ கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.சாம்பசிவன், மேலாளர் பா.இளங்கோ மற்றும் குழு வினர் சிறப்பாக ெசய்து வருகிறார்கள்.

    • முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் சமாதி, சிலையை சீரமைக்க ஏற்பாடு செய்வேன்.
    • லண்டன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செல்லூர் ராஜூ தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

    மதுரை

    லண்டன் சென்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அங்குள்ள பென்னிகுயிக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன் வீடியோ பதிவின் மூலம் பேட்டி அளித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு-

    புரட்சித்தலைவி அம்மா, பொதுசெயலாளர் எடப்பாடியாரின் ஆசியால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு திட்டங்களை பெற்று தந்துள்ளேன். தற்போது மதுரை மக்கள் 50 ஆண்டுகள் குடிநீர் பிரச்சினை இன்றி வாழ முல்லை பெரியாறு அணை யில் இருந்து 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை செய்யும் அற்புதமான திட்டமும் கொண்டு வரப் பட்டுள்ளது. இதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .

    5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் வெள்ளையர்களில் நல்ல மனம் படைத்த, கடவுள் போன்று போற்றக்கூடிய ஜான் பென்னிகுயிக் அவர்கள். அவர்களது இந்த கல்லறையை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த தற்காக ஆண்டவனுக்கும், புரட்சித்தலைவி அம்மா வுக்கும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜான் பென்னிகுயிக் அவர்களின் கல்லறையை பார்க்கும்போது மிகுந்த மன வருத்தம் அடைகிறேன். இந்த கல்லறையும் அவரது சிலையையும் சீரமைத்து கொடுப்பதாக தி.மு.க. அரசு உறுதியளித்தது. ஆனால் அதற்குரிய பணத்தை செலுத்தவில்லை என்று ஆலய கமிட்டியினர் என்னிடம் தெரிவித்தனர்.

    இது மிகுந்த வருத்தத் திற்குரிய நிகழ்வாகும். தி.மு.க. அரசு வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எல்லோருக்குமே அல்வா கொடுத்துள்ளது. அதே பாணியில் பென்னிகுயிக் சிலை மற்றும் சமாதியை பராமரிப்போம் என்று கூறிவிட்டு இப்போது அதையும் செய்யாமல் மவுனமாக இருக்கிறார்கள்.

    அரசு செய்யாவிட்டால் நானே முன் நின்று அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடியாரின் ஆலோசனையை பெற்று பென்னிகுயிக் அவர்களின் சமாதி மற்றும் சிலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்வேன். இதனை எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.

    தமிழகத்தில் எடப்பாடி யார் மீண்டும் முதல்-அமைச்சரானதும் இந்த பணிகள் நடைபெறும் வகையில் அதற்கு முன்ன தாகவே மக்களிடம் நிதி திரட்டி பென்னிகுயிக் அவர்களின் சமாதி மற்றும் சிலைகளை சீரமைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
    • பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளதை யொட்டி யாகசாலை பூஜைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்ட பத்தில் இன்று காலை முதல் நடைபெற்றது.

    அழகர்கோவில் கள்ள ழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜையில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. எஜமானர் அழைப்பு, வாஸ்து சாந்தி, புன்யாக வாசனம், கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி பூர்ணாகுதி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ராஜகோபுரம் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பாலாலய பூஜையுடன் ராஜகோபுரம் வண்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் 6.25 அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் உடையது. தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் காட்சி யளிக்கிறது.

    • ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக் கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்ப தற்கான பூமி பூஜை, முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப் பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார். அவைத் தலைவர் பாலசுப்ரமணி யன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்த ராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய மணி, ஜெயமாலா, பால முருகன், நகர் செய லாளர்கள் ரகுபதி, மனோ கரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவ சதீஷ், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 3 வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் கடந்த 7-ந்தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் வேஷ்டிகளை 2 சரக்கு வாகனங்களில் எடுத்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது நடந்த விசாரணையில் ரூ.3.5 லட்சத்துக்கு நில அளவையர் சரவணன் என்பவர் ஏற்கனவே நடந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேஷ்டிகள் என கூறி மோசடி செய்து, விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 4 பேர்களிடம் இருந்து வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியாக நில அளவையர் சரவணன் என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் தஞ்சாவரில் பதுங்கியிருந்து சரவணனை தல்லாகுளம் தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது 3 வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர். சரவணனை நிரந்தர பணி நீக்கம் செய்வதற்காக மதுரை மாவட்ட கலெக்டருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படுகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக உள்ளது. தற்போது மழை காரணமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.

    இதுபோதாதென்று சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்களது இஷ்டத்துக்கு மாடுகளை முக்கிய சாலைகள், தெருக்களில் அவிழ்த்து விடு கின்றனர்.

    அவைகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் அமர்ந்தும், குறுக்கே இடைமறித்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர்.

    பெரியார் பஸ் நிலையம், 4 மாசி வீதிகள், 4 வெளிவீதிகள், காமராஜர் சாலை, வில்லா புரம்-அவனியாபுரம் ரோடு, திருப்ப ரங்குன்றம், கைத்தறி நகர், காளவாசல், பை-பாஸ் ரோடு களில் மாடுகள் அணிவகுத்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும்.

    குப்பை தொட்டிகளை தேடி செல்லும் மாடுகள் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் நடுரோட்டி லேயே மாடுகள் சண்டையிடு வதும், சில நேரங்களில் மிரள் கின்றன.இதனால் வாகனங்கள் மீது மாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை யில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மாடுகள் முகாமிடு கின்றன. பல மணிநேரம் சாலை யில் அசைபோட்டவாறு நிற்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பூமார்க்கெட், சிக்னல் பகுதிகளில் மாடுகளின் தொல்லையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் இடையூறால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகளில் பால் கறந்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அதனை கொட்டகையில் அடைக்காமல் ரோட்டில் விடுகின்றனர். அவைகள் சிறிய தெருக்கள் முதல் முக்கிய சாலை வரை ஆக்கிரமித்து பொதுமக்க ளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறது. எனவே மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போரை கணக்கெடுத்து அவர்கள் மாடுகளை ரோட்டில் விடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    பை-பாஸ் ரோட்டில் மாட்டு கொட்டகைகள்

    மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி சர்வீஸ் சாலைகளை மாடு வளர்ப்போர் சிலர் கொட்டகையாக பயன்படுத்தி மாடுகளுக்கு தீணிகள் மற்றும் தண்ணீர் வைத்து அங்கேயே பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி சாலைகளில் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்‌.

    மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செய லாளராக டேவிட் அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த மகேந்திரன் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க.விற்கு மகேந்திரன் தாவியதை அடுத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.

    இவர் அ.ம.மு.க. வில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

    புதிய மாவட்ட செய லாளராக டேவிட் அண்ணா துரையை நியமித்து கட்சியின் பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டசபை தொகுதி கள் வருகின்றன.

    எனவே புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரைக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்து ழைப்பை நல்கிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சரவணன் நியமிக்கப்பட் டுள்ளார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மக்களின் பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்கு ளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது.

    அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு நிரப்பப்பட்டது. இதன் காரணமாக தெப்பக் குளம் முழுவதுமாக நிரம்பி பிரம்மியாக காட்சி யளிக்கி றது. ஆனால் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரில் கழிவுநீரும், குப்பைகளும் கலந்தி ருந்ததால் தெப்பக்குளத்தில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தண்ணீர் சுகாதாரமின்றி இருப்பதால் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்தன. கடும் துர் நாற்றத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தெப்பக்குளத்தில் மிதந்த கழிவுகளை ஊழியர்கள் படகில் சென்று அகற்றினர். முக்கியத்துவம் வாய்ந்த தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் துர்நாற்றம் வீசுவதை தடுத்து சுகாதாரமாக வைத்து கொள்ள நடவ டிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சோழவந்தான் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் உள்ள ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் விநாயகர் உள்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது

    இவ்விழாவில் சோழ வந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி, அருணாச்சலம், அருணா, அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம், சுற்றுலாத் துறை அலுவலர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
    • சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சுவாமி கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை சூரசம்கார விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும், விக்னேஸ்வரன் பெண் வீட்டாராகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம், கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    • பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மேலூர் பகுதி விவசா யத்திற்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சட்டமன்ற சட்டசபை அரங்கில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து மேலூர் ஒருபோக பாசன விவசாயம் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 133 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் இருபோக பாசனப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் ஒருபோக பாச னத்திற்கு போதுமானதாக இருக்கும். எனவே மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×