search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை
    X

    அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை

    • ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக் கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்ப தற்கான பூமி பூஜை, முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப் பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி னார். அவைத் தலைவர் பாலசுப்ரமணி யன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக் குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்த ராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெய மணி, ஜெயமாலா, பால முருகன், நகர் செய லாளர்கள் ரகுபதி, மனோ கரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவ சதீஷ், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×