என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்குட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சந்தன பில்கேட்சை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்கள்.

    • திருமங்கலத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிட பூமி பூஜை நடந்தது.
    • நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் சின்னக் கடை வீதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இதற்குள் மீன்மார்க்கெட் தனியாகவும் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மார்க்கெட் மிகவும் குறுகலாகவும் இடப்பற்றாக் குறையுடனும் இயங்கி வருகிறது.

    இதில் நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டி காய்கறி வியாபாரிகளின் நலனை பாதுகாக்க நகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக 40 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுஒப்புதல் பெறப்பட்டது.

    இதனை தொடர்ந்து இதற்கான 40 கடைக ளுக்கான பூமிபூஜை மார்க்கெட்டில் வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளார் ரத்தினவேல் முன்னிலையில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், தி.மு.க. கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், திருக்குமார், விரக்குமார், சின்னசாமி, வினோத், சாலியா உல்பத், சரண்யா ரவி, ரம்ஜான்பேகம்ஜாகீர், சங்கீதா, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் நகராட்சி ஓவர்சிஸ் ராஜா, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் 

    • சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.
    • மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
    • வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும், திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் மாலை 6ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டு 4969 கன அடி நீரானது குறைக்கப்பட்டுள்ள நிலையில் 2-வது நாளாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.

    மதுரை வைகையாற்றின் மையப் பகுதியான மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் வெள்ளநீர் வெளியேற முடியாமல் மெதுவாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையின் மற்றொரு புறம் ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதி முழுவதிலும் வெள்ள நீரானது கடல் போல இரு புறங்களிலும் ஓடி செல்கின்றன.

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விவசாய தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் விரைவாக செல்ல முடியாத அளவிற்கு மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை அளித்த நிலையிலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இடையே நிலவும் அதிகாரவரம்பு பிரச்சனையால் ஆறு முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.

    மேலும் தடுப்பணை அருகே உள்ள பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளதால் வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுப்பாதைகளான கோரிப்பாளையம், நெல்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.

    மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை பேரிடர் மீட்புத்துறையால் விடுக்கப்பட்ட நிலையிலும் வைகையாற்று பகுதிகளில் பொதுமக்கள் துணிதுவைப்பது, குளிப்பது, மீன்பிடிப்பது, கரையோரங்களில் வாகனங்களில் செல்வது போன்ற ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வைகையாற்று பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் இல்லாத நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக சென்று வருவதால் காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
    • திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போது ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைத்துள்ளனர். இதனால் ரூ.8 முதல் ரூ.10 வரை மக்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் கொள்ளையடிக்கிறது.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும்போது ஏதேனும் குறைகள் இருந்தால் பாலை நிராகரித்து வருகின்றனர். ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பொய்யை பரப்பி வருகிறார். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவினில் 1 சதவீதம் கொழுப்பு குறைத்தால் ரூ.8 வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 1.3 சதவீதம் வரை கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தை கொள்ளையடிக்கின்றனர்.

    இந்தியா முழுவதும் அமுல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 65 சதவீத லாபம் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக கூறி வருகிறது. அதற்கு முதலமைச்சரின் பங்களிப்பு என்ன? என்று தெரியவில்லை.

    ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் கோவில் வருமானத்தை வைத்து நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க. அரசு எந்த பங்களிப்பும் செய்யவில்லை. திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜனதா கட்சியில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா கட்சியிலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நம் நாட்டில் கிரிக்கெட்டை விளையாட்டாக கருத வேண்டும். நம் மக்களுக்கு வெற்றியையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றும் அந்த நாட்டு மக்கள் எந்த ஆரவாரமும் செய்யவில்லை. எனவே விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது50), பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி பாண்டியம்மாள். 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கிறார்.

    சம்பவத்தன்று பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் நகைகள், ரூ.21,500 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் ராகவன் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை நடத்தினர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடும்படியாக தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கிராமத்திற்குள் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளதால் வெளியூரை சேர்ந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், இது உள்ளூரில் இருப்பவர்களில் ஒருவரின் கைவரிசையாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். அப்போது கூடிப்பேசிய ஊர் பெரியவர்கள் நகை-பணத்தை திருடியவரை உள்ளூரில் வைத்து கைது செய்தால் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்தனர். இதையடுத்து நகை-பணத்தை மீட்டுத்தர வேறு வழிமுறையை கையாள முடிவு செய்தனர். இதுகுறித்து கிராமத்தினரிடமும் பேசினர்.

    அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு பேப்பர் கவரை கொடுத்தனர். இரவில் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய அண்டாவை வைத்து அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டு யாராவது திருடி இருந்தால் கவருக்குள் பொருளை வைத்து அண்டாவிற்குள் போட்டுவிட வேண்டும் என முடிவு செய்தனர்.

    இது தொடர்பான விவரங்களை தண்டோரா மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் அறிவித்தனர். இரவு 8 மணிக்கு பள்ளிக்கூட அறையில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது. 

    ராகவன்-பாண்டியம்மாள்.

    ராகவன்-பாண்டியம்மாள்.

    பின்னர் அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்தபோது ஒரு கவரில் நகைகள் இருந்தன. ஆனால் திருடப்பட்ட 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகை மட்டுமே இருந்தது. மேலும் பணத்தை வைக்கவில்லை. கவரில் இருந்தது திருடப்பட்ட ராகவனின் நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை கிராம பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நகைகளை ராகவனிடம் ஒப்படைத்தனர்.

    தங்களது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் காணாமல் போன நகைகளை மீட்க பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சுவாரசியமான இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் கிராம மக்களை பாராட்டினர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    பொதுவாக அந்த காலத்தில் இருந்தே இதுபோன்ற நடைமுறையை கையாண்டு வருவதாகவும், பழங்காலத்தில் பெரிய பொருட்கள் என்றால் வீடு வீடாக பைகளை கொடுத்தும், மோதிரம் போன்ற பொருட்கள் என்றால் சாணி உருண்டையைக் கொடுத்தும் ஒவ்வொரு வீடாக கொடுப்பது வழக்கம். திருடியவர்கள் அதை கொண்டு வந்து அண்டாவில் போட்டு விடுவார்கள். இப்போது அதே நடைமுறையை கையாண்டதில் நகைகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பாக்கி உள்ள நகை-பணத்தை மீட்க மீண்டும் இதே வழிமுறையை கையாளப்போகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை காட்சிகளில் இதுபோன்ற வழிமுறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் நேரடியாக ஒரு கிராமத்தில் இதுபோன்ற காட்சிகளில் நகை மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும்.

    மதுரை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தையில் வளாகத்தில் இன்று பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 400 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் இன்று கிலோ 1,800 ரூபாயாக விலை உயர்ந்தது. இது தவிர பிச்சி பூக்கள் 800 ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 900 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்களின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன்களுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருந்த நிலையில் தற்போது அதன் வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இனி டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும். இதன் காரணமாக இதன் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை மதுரை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு அச்சகம் மற்றும் கூட்டுறவு ஒன்றியம் ஆகிய சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகு பெற்ற விண்ணப்பதாரர்க ளிடம் இருந்து விண்ணப்பங்கள் drbmadurai.net இணையதளம் வழியாக வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை சமர்பிக்கலாம்.

    இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மதுரை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீ கரிக்கப் பட்ட ஏதேனும் ஒரு பல் கலைக்கழகத்தால் வழங்கப் படும் கூட்டுறவில் முது நிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் இதற்கு விண்ணப் பிக்கலாம்.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும், தமிழ்நாடு கூட்டு றவு ஒன்றியத்தால் நடத்தப் படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்திய தற்கான ரசீதினை மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பின ருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத்தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நி மற்றும் வங்கியியல், கூட்டு றவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கி யதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்க ளுக்கானதாகவும் தேர்வுக்கான காலஅளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும்.

    வினாத்தாள் ஆங்கிலம், தமிழில் அச்சடிக்கப்பட்டி ருக்கும். எழுத்து தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப் பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப் பெண் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒது க்கீடு செ ய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
    • வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 10-ந்தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்றைய கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்தது. இந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. 

    ஏ.வி. மேம்பாலத்தின் அடியில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்

    ஏ.வி. மேம்பாலத்தின் அடியில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்

    இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. வருகிற 8-ந்தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. தற்போது இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் வைகை ஆற்றில் வருகிறது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் கரைகளை தாண்டி தண்ணீர் சாலைகளில் ஓடியது.

    இதையடுத்து வைகை ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீருக்குள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர்.

    மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் அந்த பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ×