search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletics Competitions"

    • மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்குட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சந்தன பில்கேட்சை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்கள்.

    • போட்டியில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.
    • சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு பெற்றார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற திசையன்விளை வட்டார தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    இதில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். ஜூனியர் பிரிவில் இன்பதரணி குண்டு எறிதலில் முதல் பரிசு, வட்டு எறிதலில் 2-ம் பரிசு, சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு, குண்டு எறிதலில் 2-ம் பரிசு, ஜீசஸ் அனுஷா 1,500 மீட்டர் 2-ம் பரிசு, சூப்பர் சீனியர் பிரிவில் இந்து 200 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு, தன்யா 100 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டங்களில் முதல் பரிசு, ரோமிஸ்ரீ ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் முதல் பரிசு அனுஜா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு 800 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு சந்தியா வட்டு எறிதலில் முதல் பரிசு, பிளசி வட்டு எறிதல், குண்டு எறிதலில் 2-ம் பரிசு, மேலும் 4×400 தொடர் ஓட்டத்தில் முதல் பரிசு, 4×100 தொடர் ஓட்டத்தில் 2-ம் பரிசும் பெற்றுள்ளார்கள்.

    வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் தொடக்கி வைத்தார். குறிப்பாக 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்ப ந்தயம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடை பெற்றது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதி க்கப்பட்டனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்து தேசிய அளவிலான போட்டி களில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×