search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்- இன்றும், நாளையும் நடக்கிறது
    X

    தடகள போட்டியில் கலந்து கொண்டு ஓடிய மாணவிகளை படத்தில் காணலாம்.

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்- இன்றும், நாளையும் நடக்கிறது

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் தொடக்கி வைத்தார். குறிப்பாக 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்ப ந்தயம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடை பெற்றது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதி க்கப்பட்டனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்து தேசிய அளவிலான போட்டி களில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×