search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவின் நிர்வாகம் மோசமாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    ஆவின் நிர்வாகம் மோசமாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

    • ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
    • திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போது ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைத்துள்ளனர். இதனால் ரூ.8 முதல் ரூ.10 வரை மக்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் கொள்ளையடிக்கிறது.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும்போது ஏதேனும் குறைகள் இருந்தால் பாலை நிராகரித்து வருகின்றனர். ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பொய்யை பரப்பி வருகிறார். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவினில் 1 சதவீதம் கொழுப்பு குறைத்தால் ரூ.8 வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 1.3 சதவீதம் வரை கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தை கொள்ளையடிக்கின்றனர்.

    இந்தியா முழுவதும் அமுல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 65 சதவீத லாபம் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக கூறி வருகிறது. அதற்கு முதலமைச்சரின் பங்களிப்பு என்ன? என்று தெரியவில்லை.

    ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் கோவில் வருமானத்தை வைத்து நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க. அரசு எந்த பங்களிப்பும் செய்யவில்லை. திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜனதா கட்சியில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா கட்சியிலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நம் நாட்டில் கிரிக்கெட்டை விளையாட்டாக கருத வேண்டும். நம் மக்களுக்கு வெற்றியையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றும் அந்த நாட்டு மக்கள் எந்த ஆரவாரமும் செய்யவில்லை. எனவே விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×