என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
    • தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற இயலும்.

    எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
    • தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.

    கன்னியாகுமமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் மாதரசி அன்னை சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.

    இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளுக்காகவும் அவர் முன்வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.

    காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
    • சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. அதனை பார்த்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "இந்திய அரசியலமைப்பின் பிரதான சிற்பி அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

    சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் கண்ட கனவினை நிறைவேற்ற பாடு படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை" என்றார்.

    இதைதொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "

    கங்கை இங்கு வரவேண்டும் குமரி கடலை தொட வேண்டும் என்பதற்கேற்ப கங்கை நதியை குமரி கடலில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கி உள்ளேன்.

    இந்தத் திட்டம் விவசாயத்திற்கு பெரிதும் உதவும். மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளை தடுக்கவும் இது வழிவகை செய்யும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பெரும் லாபத்தினையும் ஈட்டி தரும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலை குமரிக்கடலை தொடும்" என்றார்.

    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு.
    • ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.

    தமிழ்நாட்டை தாக்கிய ஃபெங்கல் புயலின் தாக்கத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளதாக கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டவட்டமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்திற்காக, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளேன்.

    சபாநாயகர் அவர்களுக்கு, ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.

    ஃபெஞ்சல் புயல் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு நிவாரணமாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.

    மேலும், மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி, சேதங்களை மதிப்பிடவும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட “கியூ” காணப்பட்டது.
    • கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் ”சூட்கேஸ்”, கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கடந்த 16-ந்தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    சபரிமலை சீசன் தொடங்கிய நாள் முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சீசனையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ"வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிமூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ஹெல்மெட், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டு வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தார்.

    அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் மிக அதிகமான ஒலி எழுப்பும் சைலன்ஸருடன் மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஓட்டியது தெரியவந்தது.

    இருசக்கர வாகனத்தின் நிறத்தை மாற்றியும் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் மோட்டார் வாகன சட்ட பிரிவின்படி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதேபோல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் ஆகியோர் நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    காரை பறிமுதல் செய்ததுடன் அந்த நபருக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் ஆட்டோ டிரைவர் ஒருவரும் குடிபோதையில் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட காரையும், ஆட்டோவையும் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்தவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் லைசென்ஸை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்கு பிறகு கடல் அடிக்கடி உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, கடல் சீற்றம், கொந்தளிப்பு, நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பது என்பன போன்ற பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பெங்கல் புயல் உருவான சூழ்நிலையில் 29-ந்தேதி வரை கடலில் பலத்த மழையுடன் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. இடையிடையே சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்த சூழலில இன்று கன்னியாகுமரி கடல் அலை இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சியளிக்கிறது. கரையில் மட்டும் லேசாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடல் இது போன்று அமைதியாக குளம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் அதே நிலை காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஆனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கு போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    • வெள்ளி விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
    • திருவள்ளுவர் சிலை இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    இந்த சிலையின் முதலாம் ஆண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் அரசு சார்பில் கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழையிலான கூண்டு பாலமும் திறக்கப்படுகிறது.

    மேலும் திருவள்ளுவர் சிலையில் ரூ.3 கோடி செலவில் லேசர் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் கன்னியாகுமரி நகரை அழகுபடுத்தும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை இரவு பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
    • மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

    கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியது.

    இந்த விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதில், மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ்மோன் என்ற மீனவ சகோதரரை மீட்க கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    மேலும், கப்பற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் படகு கவிழ்ந்து மீன்பிடி படத்திற்குள் இருந்த இரண்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இவர்கள் படகுக்குள் சிக்கி மூழ்கி இருப்பார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்திய கப்பற்படையின் பயிற்சி பெற்ற வீரர்களால் இவர்களை கடலின் அடி தளத்திற்கு சென்று தேட முடியும். ஆகவே இந்திய கப்பற்படை சிறப்பு வீரர்களை இதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தக்கலை, திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜோகன் (27), கேரளாபுரத்தை சேர்ந்த அபினேஷ் (30), அடப்பு விளையை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களது வங்கி கணக்கையும் முடக்கினார்கள்.

    கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜெயசேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×