என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சேட்டு உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரை சேர்ந்தவர் சேட்டு (வயது31) டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்த சேட்டு தற்காலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது.
    • சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே திருக்கனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். விவசாயி, இவரது மகள்கள் ஆசியா (வயது 17) 12- ஆம் வகுப்பு, சிவாஷினி (15) 10- ஆம் வகுப்பு, ஆகியோர் மூரார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆசியா, சிவாஷினி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் பள்ளி முடிந்து மாலை மூரார்பாளையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஆலத்தூர் வந்து இறங்கினர்.

    அங்கிருந்து திருக்க னங்கூர் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் சிவன் கோவில் எதிரே இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (21) என்பவர் ஆசியாவிடம் உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அதற்கு ஆசியா ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அய்யனார் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி தாக்கினர்.

    அப்போது உடன் இருந்த சிவாஷினி ஏன் எனது அக்காவை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 17 வயதுடைய வாலிபர் சிவாஷினியை திட்டி தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை சம்பவ இடத்தில் இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் (18) என்பவர் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசியா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் நீலகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது வாலிபர் இளஞ்சிரார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் நீலகண்டன் என்பவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாழ்வந்தான்குப்பம் இருந்து திம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது.
    • பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஉளுந்தூர்பேட்டை இருந்து கள்ளக்குறிச்சியில் செல்லும்போது வாழ்வந்தான்குப்பம் இருந்துதிம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது இந்த பையினை மழவராயனூரை சேர்ந்த குமார், காட்டு நெமிலியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது. பையினை மீட்டு கொடுத்த 2 பேரையும் பல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்துமனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் .
    • நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) இவருக்கு செல்வி (28) என்ற மகள் உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 வருடங்களாக தாய் பார்வதியுடன் வசித்து வருவதாகவும் செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாண்டிச்சேரியில் உள்ள அரசு பொது ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இருந்தார். இது குறித்து தாய் பார்வதி கொடுத்த புகாரின் ேபரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜா, சர்மிளா இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
    • தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ராஜாவின் தாய்க்கும் சர்மிளாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் சர்மிளா கோபித்துக் கொண்டு இந்திலியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வர தன் சொந்தக்காரர்கள் சித்ரா, பிரபு, அலமேலு, தெய்வமணி ஆகியோருடன் ராஜா சென்றனர். இதனால் சர்மிளாவின் தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது அவர்கள் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக சந்திரசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30), கார்த்திகேயன்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் குச்சி காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டி(25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40), தையல் தொழிலாளி. இவருக்கு செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×