என் மலர்
கள்ளக்குறிச்சி
- 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது
- திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி, சளியை பரிசோதித்த போது அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப் பெண் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு9.20 மணிக்கு அப் பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அக் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- யுவராஜ் (வயது29). இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
- 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ் (வயது29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிந்து வந்த இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூரில் பேருந்து ஏற முயன்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.
- இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
- இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.
இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
- இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
- வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பைரவி (வயது 17) பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார்
- வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் பைரவி (வயது 17) இவர் அருகிலுள்ள பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார் எனகூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் இது சம்பந்தமாக மாணவியின் தந்தை ரவி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு (வயது33). இவருக்கும், அருள்(50) இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அரசு (வயது33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள்(50) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருள், அவரது மகன் ஸ்டாலின் மற்றும் ராமசாமி மகன் விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அருள், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள விவேக்கை தேடி வருகிறார்.
- கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் மூலக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 2 லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரனையில் தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த தம்பிதுரை (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் செல்வராஜ் என்பதும், 2 பேரும் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தம்பிதுரையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னபுளியங்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.
கள்ளக்கறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, இறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுயடியார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான ப. ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான யூ.எஸ். வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேலாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்






