search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female victim"

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் வீரிசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மலர் (வயது 48).

    தீபாவளி பண்டிகையை யொட்டி கே.வி.குப்பத்தை அடுத்த வடு கன்குட்டை கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அதிரசம், முறுக்கு, எள்வடை உள்ளிட்ட பலகாரங்களை கொடுப்பதற் காக நேற்று முன்தினம் மொபட்டில் கோவிந்தசாமி, மலர் ஆகியோர் சென்றனர்.

    சென்னங்குப்பம் அருகே உள்ள ஆலம ரம் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து நாய் மீது மோதாமல் இருப்ப தற்காக கோவிந்தசாமி உடனடியாக பிரேக் பிடித்தார்.

    அதனால் கட்டுப்பாட்டை இழந்து மொபட் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த கோவிந்த சாமி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மலர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியை நகரை சேர்ந்தவர் விமலா (வயது 45) அதே பகுதியில் வீட்டில் சமைத்து எடுத்து சென்று அருகில் ஓட்டல் கடை வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி படுகாயம் அமைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார்.

    • இரவு பெய்த மழையால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது.

    இந்த ஓட்டலில் உள்ள சமையல் கூட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

    இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. ஓட்டல் உரிமையாளர் சலவன் பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50). கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா, மற்றொரு பெண் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மீதி இருந்த சுவர் இடிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மூன்று பேரில் பெண் ஒருவர் பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவுக்கு அடுக்கம்பாறை வரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக நேற்று இரவு 8 மணிக்கு பைக்கில் சென்ற 2 பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த இருவரையும் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் மனைவி

    தனம்வர்த்தினி மற்றும் அதே பகுதி சேர்ந்த மேகலா என்பது தெரியவந்தது.

    தனம்வர்த்தினி மற்றும் மேகலா இருவரும் ஏகாம்பநாதர் கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று இரவு தங்கள் வியாபாரத்துக்காக பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்காக வாலாஜாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் தனம்வர்த்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேகலாவை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது
    • திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி, சளியை பரிசோதித்த போது அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப் பெண் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் நேற்று இரவு9.20 மணிக்கு அப் பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அக் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே விபத்தில் பெண் பலியானார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொப்பை மனைவி ஜெயக்கொடி (வயது40). சம்பவத்தன்று ஜெயக்கொடி உட்பட அதே ஊரை சேர்ந்த 10 பேர் கொசப்பாடி கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் களை வெட்டுவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்கொடியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்ணர். ஆனால் ஜெயக்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முனியம்மாள்.என்பவர் சாரம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • இந்த விபத்தில் முனி யம்மாள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் வீட்டி லிருந்து எதிரே உள்ள வயல்வெளிக்கு செல்வதற் காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாரம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் முனி யம்மாள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். விபத்து நடந்த போது மோட்டார் சைக்களில் 2பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடுரோட்டில் விழுந்து கிடக்கும் முனி யம்மாள் மீது ஏறாமல் இருக்க வண்டியை திருப்பும் போது அவர்கள் இருவரும் அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகினார்.அவர்களை காயங்களுடன் மீட்ட அருகே இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார்க்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தஞ்சையில் ரெயில் மோதி பெண் பலியானார்.
    • ரெயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த குளிக்க ரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவண செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊர்? என்று விபரம் தெரியவில்லை.இதை அடுத்து அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு அந்த பெண் இறந்தாரா ? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மேல் கொளத்தூர் கிராமம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தி (வயது 48).

    இவர் வயிற்று வலி காரணமாக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் நேற்று முன் தினம் வயிற்று வலி அதிகமாகவே அரளி விதை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக ஜெயகாந்தியின் மகன் கருணாகரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஹீட்டரை அணைக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷகீல்அஹமத். இவர் வெளிநாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திரு மணமாகி சித்தீகா பர்வீன் என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சித்தீகா பர்வீன் வீட்டில் உள்ள குளியல றையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வெந்நீர்போடப்பட்டு இருந்த ஹீட்டரை அணைக்க முயன்றபோது அவரை மின்சாரம் தாக்கியது.

    அவருடைய அல றல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மின்சாரத்தை அணைத்து, கதவை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த சித்தீகா பர்வீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    இதையறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே கார்-மொபட் மோதி பெண் பரிதாப இறந்தார்
    • இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி (வயது30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வி அருப்புகோட்டை ஊர் காவல் படையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் நடந்த உறவினர் விசேஷ நிகழ்ச்சிக்கு நண்பர் லட்சுமணன் (26) என்பவருடன் செல்வி மொபட்டில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் 2 பேரும் ஊருக்கு புறப்பட்டனர். மொபட்டை செல்வி ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வி, லெட்சுமணன் தூக்கி வீசப்பட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். லெட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் கல்குறிச்சி பகுதியில் நடந்த விபத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியால் செல்வதால் விபத்தில் சிக்கி இறப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • பஸ் நிலையத்தின் பின்புறம் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை சைதாப்பே ட்டை கிருஷ்ண பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54). இவரது மனைவி பத்மப்பிரியா (40). இவரது தங்கை மகள் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தை அடுத்த அன்னியூருக்கு வந்தார். அப்போது விக்கி ரவாண்டி புறவழிச்சா லையில் உள்ள பஸ் நிலையத்தின் பின்புறம் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிள் பின்புறம் வந்த வருவாய்த் துறைக்கு சொந்தமான ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே பத்மப்பிரியா பரிதாமபாக இறந்து போனார். பலத்த காய ங்களுடன் சாலையில் கிடந்த கோவிந்தராஜை அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் பத்மப்பிரியாவின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×