search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே  வாகனம் மோதி பெண் பலி
    X

    திண்டிவனம் அருகே வாகனம் மோதி பெண் பலி

    • முனியம்மாள்.என்பவர் சாரம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • இந்த விபத்தில் முனி யம்மாள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் வீட்டி லிருந்து எதிரே உள்ள வயல்வெளிக்கு செல்வதற் காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாரம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் முனி யம்மாள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். விபத்து நடந்த போது மோட்டார் சைக்களில் 2பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடுரோட்டில் விழுந்து கிடக்கும் முனி யம்மாள் மீது ஏறாமல் இருக்க வண்டியை திருப்பும் போது அவர்கள் இருவரும் அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகினார்.அவர்களை காயங்களுடன் மீட்ட அருகே இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார்க்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×