search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி பெண் பலி
    X

    வாகனம் மோதி பெண் பலி

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக நேற்று இரவு 8 மணிக்கு பைக்கில் சென்ற 2 பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த இருவரையும் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் மனைவி

    தனம்வர்த்தினி மற்றும் அதே பகுதி சேர்ந்த மேகலா என்பது தெரியவந்தது.

    தனம்வர்த்தினி மற்றும் மேகலா இருவரும் ஏகாம்பநாதர் கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று இரவு தங்கள் வியாபாரத்துக்காக பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்காக வாலாஜாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் தனம்வர்த்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேகலாவை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Next Story
    ×