search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரளி விதை குடித்து பெண் பலி
    X

    அரளி விதை குடித்து பெண் பலி

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மேல் கொளத்தூர் கிராமம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தி (வயது 48).

    இவர் வயிற்று வலி காரணமாக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் நேற்று முன் தினம் வயிற்று வலி அதிகமாகவே அரளி விதை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக ஜெயகாந்தியின் மகன் கருணாகரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×