search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே விபத்தில் பெண் பலி
    X

    சங்கராபுரம் அருகே விபத்தில் பெண் பலி

    • சங்கராபுரம் அருகே விபத்தில் பெண் பலியானார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொப்பை மனைவி ஜெயக்கொடி (வயது40). சம்பவத்தன்று ஜெயக்கொடி உட்பட அதே ஊரை சேர்ந்த 10 பேர் கொசப்பாடி கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் களை வெட்டுவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்கொடியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்ணர். ஆனால் ஜெயக்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×