search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே    கொேரானா பாதித்த பெண் பலி
    X

    திருக்கோவிலூர் அருகே கொேரானா பாதித்த பெண் பலி

    • 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது
    • திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி, சளியை பரிசோதித்த போது அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப் பெண் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு9.20 மணிக்கு அப் பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அக் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×