search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் மீது  அரசு ஜீப் மோதி பெண் பலி
    X

    விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு ஜீப் மோதி பெண் பலி

    • பஸ் நிலையத்தின் பின்புறம் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை சைதாப்பே ட்டை கிருஷ்ண பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54). இவரது மனைவி பத்மப்பிரியா (40). இவரது தங்கை மகள் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தை அடுத்த அன்னியூருக்கு வந்தார். அப்போது விக்கி ரவாண்டி புறவழிச்சா லையில் உள்ள பஸ் நிலையத்தின் பின்புறம் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிள் பின்புறம் வந்த வருவாய்த் துறைக்கு சொந்தமான ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே பத்மப்பிரியா பரிதாமபாக இறந்து போனார். பலத்த காய ங்களுடன் சாலையில் கிடந்த கோவிந்தராஜை அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் பத்மப்பிரியாவின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×