search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே   சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
    X

    சாராய ஊறல்களை படத்தில் காணலாம்..

    திருக்கோவிலூர் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

    • 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.
    • பாலு (வயது 45) ராஜேந்திரன் (வயது 33) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள எக்கா மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சாராயவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அதேபோல் ஒட்டம்பட்டு கிராமத்தில் 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×