என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் கொடுக்க பெற்றோர்கள் முடிவு
- இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
- பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை சரிவர போடவில்லை என மாணவர்கள் தெரிவித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் சத்துணவு பொறுப்பாளரை கேட்டுள்ளனர். இது தவிர பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களின் ஒரு பிரிவினரை சமுதாய ரீதியாக அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியருக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்த கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்று முடிவில் காரசாரமான சண்டையும் பள்ளி மாணவர்கள் மத்தியி லேயே நடைபெற்றுள்ளது இது பற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகள் விசாரணையில், தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு சில ஆசிரியர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்து விரிவான விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 3 ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணிக்காக முதன்மை கல்வி அலுவலர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்கள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே சமுதாய ரீதியில் வேறுபாட்டை உருவாக்கும் வகையில் பேசிய தலைமை ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இதனை தட்டி கேட்ட ஆசிரியர்களுக்கு தண்டனை என்பது மாணவர்களை அவமதிக்கும் செயலாகும் எனவே இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மற்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தை அணுக உள்ளதாகவும் மற்ற ஆசிரியர்களுக்கான மாற்றுப் பணிக்கான உத்தரவை ரத்து செய்து வன்கொடுமை பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை வலியுறுத்தி புகார் கொடுக்க உள்ளோம்
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முதல் கட்டமாக புகார் தெரிவிப்பது எனவும், இதில் நடவடிக்கை இல்லை எனில் மாணவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முதல் கட்ட விசாரணையில் 3 ஆசிரியர்களுக்கு மாற்று பணிக்கு உத்தரவிட்டிருக்கிறோம். வன்கொடுமை பேச்சு குறித்து உரிய ஆதாரங்கள் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதி மாணவர்கள், ஆசிரிய ர்களிடையே பரபரப்பு நிலுவுகிறது.






