என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அம்மாகண்ணு(80). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து வந்து சாலையை கடக்க முயன்ற போது பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பகண்டை கூட்டு ரோடுசப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த உலகிய நல்லூர்கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, லெட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது.இன்று காலை 4ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து, சிவாச்சாரியர்கள் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 150 வருடங்களுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றதால் உலகிய நல்லூர் சுற்றியுள்ள கிராமங்களான ஈசாந்தை, நாட்டார்மங்கலம், அமகளத்தூர், கருங்குழி ,நயினார் பாளையம், மாங்குளம், அனுமந்தல் குப்பம், செம்பாக்குறிச்சி, ராயர் பாளையம், பெத்தானூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை வாங்கிச் சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அபித்குமார் (வயது 19) இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த பெற்றோர், தன் மகனின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

    இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து உண்மையை விசாரித்து பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாரை விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நியமித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வினிஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழைய சிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
    • வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ் மகன் வினிஷ்குமார்(20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழையசிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பழையசிறு வங்கூர் அருகே சென்று கொண்டி ருந்தபோது, தியாகதுருகத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி எதிரே வந்த சரக்கு வாகனம் அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாய மடைந்த வினிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெ க்டர் சூர்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்பராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது30) என்பவர் அவரது வீட்டில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
    • பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட த்திற்கான விண்ண ப்பப்பதிவு முகாம்கள் ஜூலை 24-ந் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 766 நியாயவிலை கடைகளில் உள்ள 4,34,663 குடும்ப அட்டைகளில், முதற்கட்டமாக ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் 14-ந் தேதி வரையும் 3,75,613 குடும்ப அட்டையை சேர்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படு த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரமேஷ் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). வியாபாரி. இவர் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கொரல் அருகேயுள்ள சாலையில் வந்த போது, நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடி தண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது.
    • அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் திருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடிதண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீரை பயன்படுத்த முடியால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் ஆறுபோல் வழிந்தோடும் நீரை விவசாய மோட்டார் மூலம் பொதுமக்கள் பலக்கத்திற்கு உபயோப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சாலை முழுவதும் குடிநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாமலும், 3 நாட்கள் குடிநீர் அந்த பகுதியில் சூழ்ந்து உள்ளதால் அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

    குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அந்த பகுதி மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று கூறினர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய அதிகாரிகள் மூலம் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து வீணாக சாலையில் செல்லும் குடிநீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
    • சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவீட்டில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை மாற்றி பயிரிட்டால் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.

    சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள், எனவே காய்கறிகளும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும், சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வேளாண் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். மேலும் வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் தோட்ட கலை துறை சசிகலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் (பொ) சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×