என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
    • விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனிசிபல்காலனி பாப்பாத்திகாடு 2-வது வீதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு செல்வகணபதி, தர்ம சாஸ்தா, சிவகாமசுந்தரி, அம்பிகை சமேதே கைலாச நாதர் மற்றும் லட்சுமி நாராயணர், ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி காலை கணபதி பூஜை, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

    அன்று மாலை ரக்‌ஷா பந்தனம், 108 திரவியங்களால் திரவியாகுதி, திருமறை பாராயணம் நடந்தது.

    நேற்றுவேத பாராயணம், மகா பூர்ணாகுதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் சிவாச்சாரி யார்கள் பங்கேற்று கோவிலின் கும்பம், மூலவர் மற்றும் பரிவார பீடங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர்.

    விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கி ழமை) முதல் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளது.

    • கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரிடம் வாணிப்புத்தூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பரிசு விழும் என ஆசை வார்த்தை கூறி ரூ.100 வாங்கி கொண்டு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 2 கொடுத்துள்ளார்.

    விசாரித்ததில் இரண்டு லாட்டரி சீட்டுக்களும் போலி என தெரியவந்தது, இதனையடுத்து தன்னை ஏமாற்றிய குமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் கார்த்திக் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.

    குமாரிடம் இருந்து ரூ.2,800 மதிப்புள்ள 56 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், செல்போன், லாட்டரி விற்ற பணம் ரூ.300 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிடிபட்ட குமாரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார்.

    • பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
    • அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சஷ்டியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குறிப்பாக முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை. இதே நாளில் மற்ற அம்சங்களும் சேர்ந்து கொண்டதால், சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    செவ்வாய்கிழமை, சஷ்டி இரண்டும் நேற்று இணைந்து வந்ததால் சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ. 25 கட்டண தரிசனத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சென்னிமலை முருகப்பெருமானை தரிசித்தனர்.

    அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.
    • குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது.
    • இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

    சென்னிமலை:

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போராடி உயிர் நீத்த 60 விவசாயிகள் மற்றும் இலவச மின்சார உரிமை காத்திட டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த 713 விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஜுலை 5-ந் தேதி தமிழ்நாடு உழவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது.

    சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த கூட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு ஒருங்கிணைப்பாளர் பூபதி, பாசன சபை தலைவர் வி.எம்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

    • அரச்சலூர் அருகே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கண்டிகாட்டுவலசு, புது வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி.

    மணிக்கு கடந்த ஒரு வருடமாக கழுத்து வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் முதலில் நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் கழுத்து வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது மணிக்கு திடீரென கழுத்து வலி அதிகமாக இருந்தது. இதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்த மணி வீட்டில் இருந்த வாழைப்பழத்தில் சல்பாஸ் மாத்திரை வைத்து சாப்பிட்டார்.

    இது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது மனைவி கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மணி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு, ஜூலை. 6-

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெருந்துறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகளுக்கு வழங்கும் பணி, பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் மூல தன நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி மற்றும் பெருந்துறை அக்ரகார வீதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பொது அறிவு சார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் துடுப்பதி ஊராட்சியில் செயல்படுத்த ப்பட்டு வரும் 21 விவசாயிகளின் 17.15 ஏக்கர் தரிசு நிலங்களை கலெக்டர் பார்வையிட்டு திட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஆயிகவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் புதியகு ளம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து குள்ளம்பாளையம் அடுத்த மேட்டு ப்பாளையம் பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் உறிஞ்சி குழி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்,

    ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு ரத்த பரிசோதனை மையம் மருத்துவகிடங்கு மையம் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஈரோடு பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை தீயணைப்பு வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகளும், மாலை முதல் கூடைபந்து, இறகுபந்து, கைப்பந்து, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீ, 400 மீ, 1500 மீட்டம் ஓட்டம் நடக்கிறது.

    போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடத்தை பிடிப்பவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும்.

    2 நாட்களும் மாலையில் பாட்டு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும். நாளைமறுநாள் மாலை தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பும் நடக்கிறது.

    இந்த போட்டிகள் மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சத்திய நாராயணன் தலைமையில் நடக்கிறது.

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் என்ற முறையில் நான் போட்டிகளை ஒருங்கிணைக்கிறேன். போட்டி நடுவர்களாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை உணவு ஏதும் எடுக்காமல் படுத்துகிடந்தது.

    இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்தியமங்கலத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மல்லிகை பூ அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சிக்கரசம் பாளையம், வடவள்ளி, கெஞ்சனூர், தாண்டாம் பாளையம், தயிர் பள்ளம், பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளில் இருந்து பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வருகிறார்கள். தினமும் 3 டன்னுக்கு மேல் மல்லிகை பூக்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    சத்தியமங்கலத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மல்லிகை பூ அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் மைசூர், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும் மல்லிகைப்பூ கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இருந்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும். வியாபாரிகள் அதிகளவில் வந்து மல்லிகைப்பூக்களை கொள்முதல் செய்வார்கள்.

    கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால் ரூ.3 ஆயிரம் வரை மல்லிகை பூ விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் விசேஷ நாட்கள் வந்ததால் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் அதிகளவு விழாக்கள் தற்போது நடக்கவில்லை. மேலும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூக்களின் விலை கடும் சரிவடைந்து உள்ளது.

    இதனால் சத்திய மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூக்களை விவசாயிகள் சிலர் அப்படியே செடியிலேயே விட்டு விடுகிறார்கள்.

    தற்போது தினமும் 3 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் மல்லிகைப்பூக்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மல்லிகைப்பூ விலை கடும் வீழச்சி அடைந்துள்ளது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. இதனால் குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏராளமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

    விலை வீழ்ச்சி காரணமாக தினமும் 3 டன் மல்லிகை பூக்களை சத்தியமங்கலம், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சலையினர் மல்லிகைப்பூ கிலோ ரூ.170-க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.
    • இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (70) விவசாயி.

    இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சித்துமல்லு என்ற மகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர். மல்லப்பாவுக்கு தர்மாபுரம் என்ற பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.

    யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார். இன்று காலை மல்லப்பா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வந்து பார்த்த போது அவர் யானை தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் மலைகிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×