வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

அரச்சலூர் அருகே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழைப்பழத்தில் விஷமாத்திரை வைத்து  சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கண்டிகாட்டுவலசு, புது வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி.

மணிக்கு கடந்த ஒரு வருடமாக கழுத்து வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் முதலில் நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் கழுத்து வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது மணிக்கு திடீரென கழுத்து வலி அதிகமாக இருந்தது. இதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்த மணி வீட்டில் இருந்த வாழைப்பழத்தில் சல்பாஸ் மாத்திரை வைத்து சாப்பிட்டார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது மனைவி கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மணி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com