search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zonal Level"

    • மதுரையில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது
    • புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.

    புகார் மனுக்களை வருகிற 14-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    இந்த குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி, ''தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜே.பிரதீப் குமார், உதவி இயக்குநர், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002'' என்ற முகவரிக்கும் pg.madurai@indiapost.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம்.

    தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்- செப்டம்பர் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை மதுரை மண்டல தபால்துறை உதவி இயக்குநர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஈரோடு பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை தீயணைப்பு வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகளும், மாலை முதல் கூடைபந்து, இறகுபந்து, கைப்பந்து, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீ, 400 மீ, 1500 மீட்டம் ஓட்டம் நடக்கிறது.

    போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடத்தை பிடிப்பவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும்.

    2 நாட்களும் மாலையில் பாட்டு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும். நாளைமறுநாள் மாலை தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பும் நடக்கிறது.

    இந்த போட்டிகள் மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சத்திய நாராயணன் தலைமையில் நடக்கிறது.

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் என்ற முறையில் நான் போட்டிகளை ஒருங்கிணைக்கிறேன். போட்டி நடுவர்களாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×