என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
    • செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.

    இதைத்தொடர்ந்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி செந்தில் முருகன் விலகி உள்ளார்.

    • தி.மு.க.வினர் விர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி வரியாக பிரித்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தி.மு.க அரசின் சாதனை திட்ட ங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் உள்ளூர் தி.மு.க பிரமுகர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிடும் சீதாலட்சுமி இன்னமும் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் கடந்த 2 நாட்க ளாக தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆனாலும் அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக அவர் மீது ஈரோடு டவுன் போலீ சார் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் சீதாலட்சுமி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த முறை முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்புமின்றி, ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக உள்ளது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இது மட்டுமின்றி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது. தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இதனால் தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது. வாக்காளர்களும் பணம், பரிசு மலையில் நனைந்தனர்.

    இந்த முறை தேர்தல் களம் மாறி உள்ளது. தி.மு.க.வினர் மற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியாகிறது.

    இதைத்தொடர்ந்து நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிர மடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொட ர்ந்து வரும் 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

    தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    • சந்தோஷ் குமார் (20) சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
    • அதில், தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 20 வயதான இவர் சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது கேடிஎம் டியூக் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை கொண்டுள்ளார்.

    இந்நிலையில், சந்தோஷ் தனது நண்பரான கவின் (19) உடன் சேர்ந்து கேடிஎம் டியூக் பைக்கில் கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வந்தார்.

    கோவை பயணத்தை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே யூடியூபர் சந்தோஷ் அதிவேகமாக வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் எதிரே பைக் ஓட்டி வந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் யூடியூபர் சந்தோஷ் அவரது நண்பர் கவின் மற்றும் சதீஷ்குமாருடன் வந்த சந்தோஷ் (36) ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரும் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    அண்மை காலங்களில் யூடியூப் , இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சாலை விபத்தில் யூடியூபர் ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ராகுல் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தான் தெரிந்தது என்று மனைவி தகவல்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் - சாகிதா தம்பதிகளின் ஒரே மகன் ராகுல் (27).

    என்ஜினீயரிங் பயின்ற ராகுல் டிக் டாக் மூலம் பிரபலமானவர். கடந்த சில வருடங்களாக இன்ஸ்டா கிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்களையும், சினிமா பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணர்வு களோடு பதிவு செய்து ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தார்.

    இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, நேரு நகரைச் சேர்ந்த தேவிகா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு கடந்த 16-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராகுல் சென்றார்.

    அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் மரணம் அவரை பின் தொடர்ந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதற்கிடையே ராகுலின் மனைவி தேவிகாஸ்ரீ தனது மாமியார் குடும்பத்தினர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய தேவிகாஸ்ரீ, "ராகுல் இன்ஸ்டாகிராம் மூலமாக தான் எனக்கு பழக்கமானார். எங்களுக்கு கவுந்தப்பாடி புது மாரியம்மன் கோவில் திருமணம் நடந்தது.

    அதற்கு பின்னர் தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு தெரிந்தது. கோவை சேர்ந்த பெண்ணுடன் பெண்ணுடன் ராகுல் 6 மாதம் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் எனது மாமியாரின் தொந்தரவால் அந்த பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆனது.

    இருந்தாலும் இதனை நான் ஏற்றுக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் ஓர் ஆண்டாக மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தோம். அதன் பின்னர் தான் ஈரோடு வளையகார வீதியில் தனிக்குடித்தனம் வந்தோம். இந்நிலையில்தான் ராகுலுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனது மாமியார் ராகுல் மது குடிப்பதை ஊக்குவித்தார். இது தொடர்பாக என் மாமியாரிடம் நான் கேட்டபோது எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ராகுலும் என்னை அடித்து துன்புறுத்தினார். ஆனால் இதையும் தாண்டி அவருடன் நான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

    ராகுலுக்கு சினிமா மற்றும் பைக் மீது அதிக இஷ்டம். அவரிடம் அதிகமாக குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு என்னை பார்ப்பதற்காக ராகுல் தனது மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடி நோக்கி வந்த போது தான் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அதன்பின் எனது மாமியார் வீட்டினர் என்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். ராகுலின் இறுதி காரியத்துக்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. கணவரை இழந்த வேதனையில் உள்ளேன்.

    என் மாமியார் வீட்டினர் ராகுலின் ஆதார் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கேட்டு எனக்கு போன் செய்தனர். ராகுலுடன் நான் வாழ்ந்ததை மறைக்க நினைக்கின்றனர். ஆனால் அந்த பொருட்களை அவர்களுக்கு தரமாட்டேன். அவருடன் நான் வாழ்ந்ததற்கு அது தான் ஆதாரம்" என்று தெரிவித்தார்.

    மருமகள் குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரோட்டில் வசிக்கும் ராகுலின் தாய் சாகிதா கூறியதாவது:-

    நேரம் சரியில்லை என்று கூறி எனது மகனும், மருமகளும் தனி குடித்தனம் சென்றனர். என் மகளைப் போலத்தான் எனது மருமகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம். எனது மகன் ராகுலுக்கு மது குடிக்கும் பழக்கம் கிடை யாது. என் மகன் நினைவாக உள்ள பொருட்களை கேட்டோம்.

    மருமகளை அழைத்து வர சென்ற போதுதான் விபத்தில் ராகுல் சிக்கி உயிரிழந்தார். நான் ராகுலுக்கு மது வாங்கி கொடுக்கவில்லை. என் மகன் நல்லவன். என் மருமகளை நான் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.
    • கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் மொத்தம் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரும் தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது.

    இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில் தேர்தலில் இவர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்த செந்தில் முருகன் கடந்த 2023-ம் ஆண்டு ஓ.பி.எஸ் அணியில் இருந்து அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    அடுத்த சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளராக பொறுப்பேற்று வந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என அறிவித்த நிலையில் செந்தில் முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து செந்தில் முருகன் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பிரச்சினைகள் எனக்கு அதிகம் தெரியும். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். அதற்காக அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவேன் என்பது குறித்து பிரசாரத்தில் எடுத்துரைப்பேன். நிச்சயம் எனக்கு இந்த தேர்தல் திருப்புமுனைமையாக இருக்கும்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாளையில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார்.

    இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கே.வி.ராமலிங்கம் கூறும் போது, செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இருப்பது உண்மைதான். கட்சி தலைமை அறிவிப்புக்கு மாறாக அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் அவர் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

    • யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது.
    • செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக கடம்பூர் ஆசனூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் மாறி வருவதால் மலைப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு என்ற பகுதியில் சாலையை 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானை கூட்டம் சாலையை கடந்து சென்றதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சிறிது தொலைவிலேயே நிறுத்தினர்.

    பின்னர் யானை கூட்டம் வனபகுதிக்குள் சென்றதும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதி வழியாக கடந்து சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் கொசுக்கடி தொல்லை அதிகரித்து இருப்பதால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இட த்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். யானை கூட்டங்கள் ஒரே இடத்தில் இருக்காது.

    தற்போது தாளவாடி, ஆசனூர் வனப்பகுதி அருகே உள்ள சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம்.

    இதேப்போல் யானைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அனைத்து கட்சிகளும் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் திணறல்.

    பெருந்துறை:

    ஈரோடு கிழக்கு இடை த்தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதன் காரணமாக இத்தொகுதியில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது ஆளும் கட்சி யான தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 55 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சிக்கு அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ஆனால் அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரை முன்பு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    2024 மக்களவைத் தேர்தலில் இக்கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    8 சதவீத வாக்குகளுடன் தற்போது மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.

    இம்முறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட இதுவே நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயி அல்லது மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ் கூறுகையில், கரும்பு விவசாயி அல்லது மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யு மாறு நாம் தமிழர் கட்சியினர் கேட்டுள்ளனர். கரும்புடன் உள்ள விவசாயி சின்னம் ஏற்கனவே வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் அந்த சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை.

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் என்பது குறித்து நாளை 20-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலுக்கு முழுமையாக 15 நாட்கள் மட்டுமே உள்ளது.

    இன்னும் சின்னம் அறிவிக்கப்படாததால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சின்னத்தைக் கூறி வாக்கு களை சேகரிக்க முடியாமல் தவிக்கிறார். பொது மக்களையும் வாக்காளர்களையும் சந்தித்து சின்னத்தை கூறாமல் வாக்குகளை சேகரிக்கிறார்.

    தற்போது தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு இணையாக தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் சுணங்கி போய் உள்ளனர்.

    இதன் காரணமாக தேர்தல் களத்தில் திமுகவை தவிர சுயேச்சைகள் மற்றும் உள்ளிட்ட எந்த கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாததால் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் களம் ஒரு வழி பாதையாக மாறிவிட்டது.

    • ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இறுதி நாளான நேற்று தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனு தாக்கல் செய்தார். இதேபோல் சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் என கூடுதலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ரூபாய் என காண்பிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

    இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது பிரதிநிதிகள் உடன் வந்திருந்தார்.

    தி.மு.க சார்பில் சந்திரகுமார் வரவில்லை. அவர்களது பிரதிநிதிகள் வந்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார். மதியம் 12.30 நிலவரப்படி மேலும் 20 சுயேச்சை வேட்பாளர்களில் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு எவ்வளவு மனுக்கள் ஏற்கப்பட்டது என்ற முழுமையான விபரம் தெரியவரும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதியில்லாத சில மனுக்களை அலுவலர் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து வரும் 20-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8-ந் தேதி (சனிக்கிழமை) சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.

    • வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.
    • அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

    அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று கடைசி நாள் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    • நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அதே பகுதியில் கடந்த 16 வருடமாக கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். 2 தகர செட்டுகள் அமைத்து கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கோழிக்குஞ்சுகள் பெரியதானதும் அவற்றை விற்று விடுவார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலசுப்ரமணி 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி 2 தகர செட்டுகளில் அடைத்து வைத்திருந்தார். ஒரு செட்டில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 செட்டில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் இருந்து புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் ஒரு தகர செட்டில் இருந்த 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. அந்த தகர செட்டு முழுவதும் தீயில் எரிந்து கரிக்கட்டையானது. 2500 கோழிக்குஞ்சுகள் ரூ.1.50 லட்சமும், தகர செட்டு ரூ.13 லட்சமும் என மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் செயல்பட்டதால் மற்றொரு தகர செட்டில் இருந்த 2,500 கோழி குஞ்சுகள் உயிர் தப்பின.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    • ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றபோது விபத்து.
    • கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல். 27 வயதாகும் ராகுல் இன்ஸ்டா பிரபலம். ராகுலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

    நகைச்சுவையாகவும், வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.

    கலகலப்பான அவரது பேச்சு பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. அதற்காகவே அதிக நேரம் செலவிட்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

    மேலும், ராகுல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகர் சேர்ந்த வேலுமணி என்பவரது மகளை திருமணம் செய்தார்.

    இந்நிலையில், ராகுல் நேற்று இரவு அவரது பல்சர் RS200 பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராகுல் தூக்கி வீசப்பட்டு பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில், ராகுல் தலையில் பலத்த காயமந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ×