என் மலர்
ஈரோடு
- இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.
- வருகிற 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்பும் இன்றி காணப்படுகிறது. தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க.வினர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் உள்ளூர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி தனது ஆதரவாளருடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சை கருத்து க்களை தெரிவித்து வரும் சீமான் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் பிரசாரம் செய்ய வரக்கூடாது என ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
மேலும் அவர் மீது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது பிரசாரத்தை தடுத்து நிறுத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் சீமான் பிரசாரம் செய்யும் இடங்களில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் சீமான் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். காலையில் தெருமுனை கூட்டம், பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை பொதுக்கூட்ட ங்களில் பேசுகிறார்.
சீமான் பிரசாரம் செய்யும் இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாட்டம்.
- 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சரவணன் (45), மூர்த்தி (44), சிவா (30), கருப்பண்ணன் (50), மணிகண்டன் (30), செந்தில் (50), ஸ்ரீ ஹரி (21), பழனிவேல் (38), கிருஷ்ணராஜ் (25), ஜெகதீஷ் (46), தங்கராஜ் (49), தனசேகரன் (45), குமார் (43), தமிழ் (21), சோமு (55), குகன் (35), செந்தில் ராஜா (41), நாகராஜன் (44), சுரேஷ்குமார் (38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர்.
- ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சரவணன் (45), மூர்த்தி (44), சிவா (30), கருப்பண்ணன் (50), மணிகண்டன் (30), செந்தில் (50), ஸ்ரீ ஹரி (21), பழனிவேல் (38), கிருஷ்ணராஜ் (25), ஜெகதீஷ் (46), தங்கராஜ் (49), தனசேகரன் (45), குமார் (43), தமிழ் (21), சோமு (55), குகன் (35), செந்தில் ராஜா (41), நாகராஜன் (44), சுரேஷ்குமார் (38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.
- இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறந்ததை தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று காங்கிரஸ் கட்சியே இந்த முறையும் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தி.மு.க. நேரடியாக களம் இறங்கியது.
2026-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதால் தி.மு.க. தலைமை காங்கிரஸ் தலைமையிடம் பேசி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கியது. தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று தி.மு.க-நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இதில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி 2 மட்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். 4 சிறிய கட்சிகள், 40 சுயேட்சைகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளனர்.
தி.மு.க.வினர் கடந்த 15-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 பிரிவாக பிரித்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் கூட்டணி கட்சித் தலைவர்களும் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில் தற்போது வரை தி.மு.க.வினர் 20 வார்டுகளில் பிரசாரத்தை முடித்துள்ளனர். காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் மதியம் 12 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பின்னர் தேர்தல் பணிமனைக்கு வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் இரவு 9 மணி வரை பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆரவாரமும் இன்றி, பரபரப்பும் இன்றியும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிற அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அனுமதி இன்றி பிரசாரம்தான் மேற்கொண்டதாக சீதாலட்சுமி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சீதாலட்சுமி உடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் 5 பேர் முதல் 8 பேர் வரை மட்டுமே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் ஈரோடு தேர்தல் களம் இந்த முறை களை இழந்து காணப்படுகிறது. நேற்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பிரசாரம் மேற்கொண்டார். அதுதவிர இன்று வரைக்கும் வேறு தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்காட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்ள ஈரோடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வருகிறார் என தேதி முடிவாகவில்லை.
சமீபகாலமாக சீமான் பெரியார் குறித்து தெரிவிக்கும் கருத்து சர்ச்சை ஆகி வரும் நிலையில் அவருக்கு எதிராக ஈரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டால் அதை தடுத்து நிறுத்துவோம் என பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரக்கூடிய நாட்களில் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
- தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதில் மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
இடைத்தேர்தர்லில் தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
- தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
- பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஏற்கனவே தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார்.
ஆனால் சில பகுதிகளில் வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்த ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியினர் மீதும், வேட்பாளர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நேற்று தி.மு.க. வேட்பாளருக்கும் அனுமதி கிடைக்காததால் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் 5-ந்தேதி என்றாலும் பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது. அதன்படி இன்னும் 14 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பிரசாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெற வேண்டும். வேட்பாளர் பிரசாரம் செய்யும் பகுதியை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும். இங்கு 48 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். எனவே அனைவரும் பிரசாரம் செய்வார்கள். அதை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தங்கள் அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும்.
தற்போது ஒரு கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மனுவில் கூட குறிப்பிட்ட இடம், நேரம் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளை பொதுவாக குறிப்பிட்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை காலை முதல் இரவு வரை என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் 3-ந் தேதி வரை தொகுதி முழுவதும் அந்த ஒரே கட்சியினர்தான் பிரசாரம் செய்ய முடியும். இதற்கு எப்படி அனுமதி அளிக்க முடியாது.
வேட்பாளர்கள் முறையாக பிரசாரம் செய்யும் இடத்தையும், தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். இதுபோல் 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறும் வகையில் வேட்பாளர்கள் முறையாக விண்ணப்பித்தால் அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து மனு மீதான பரிசீலனையும் முடிந்துள்ளது. இடைத்தேர்தல் மொத்தம் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை எதிர்நோக்கி அரசு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
- நள்ளிரவு 1.30 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்தவர்.
இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் கூறும்போது,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எந்த மாநிலத்துக்கும் வேட்பா ளராக போட்டியிடலாம்.
ஆனால் சட்டசபை தொகுதிக்கு அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகா மாநில பெண் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து நீண்ட இழுப்பறிக்க பிறகு நள்ளிரவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.
- நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.
- வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
அடுத்து சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில், செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அமைச்சர் முத்துசாமி தலைமையிலான தி.மு.க.வினர் வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
- வெளிமாநில வேட்பாளரின் பெயரை நீக்கி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்தவுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 46 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் பட்டியலில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்ற வேட்பாளரின் பெயரை நீக்கி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47-ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியீடு.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
மதியம் 3 மணியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






