ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது!

வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது!
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று கடைசி நாள் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com