சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டங்களால் பரபரப்பு

யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது.
சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டங்களால் பரபரப்பு
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக கடம்பூர் ஆசனூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் மாறி வருவதால் மலைப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு என்ற பகுதியில் சாலையை 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானை கூட்டம் சாலையை கடந்து சென்றதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சிறிது தொலைவிலேயே நிறுத்தினர்.

பின்னர் யானை கூட்டம் வனபகுதிக்குள் சென்றதும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதி வழியாக கடந்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் கொசுக்கடி தொல்லை அதிகரித்து இருப்பதால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இட த்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். யானை கூட்டங்கள் ஒரே இடத்தில் இருக்காது.

தற்போது தாளவாடி, ஆசனூர் வனப்பகுதி அருகே உள்ள சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம்.

இதேப்போல் யானைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com