என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பேரூராட்சி யில் மொத்தம் 15 கவுன்சி லர்கள் உள்ளனர். இதில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதை நிறை வேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் கூறினார்.

    கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர கோரியும், சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள விக்னேஸ் நகர், கவின் நகர், காந்தி நகர் பகுதியில் மொத்தம் 600 வீடுகள் உள்ள நிலையில் 600 வீடுகளின் கழிவு நீரானது தார் சாலைக்கு வருவ தாகவும், அதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க கூறியும், போதிய வாகன வசதி இல்லாததை சுட்டிகாட்டிய கவுன்சி லர்கள் தீர்மா னங்களை புறக்கணித்தனர்.

    இதனையடுத்து தி.மு.க.வை சார்ந்த சுப்பிர மணியன், நந்தகோபால், சித்திக் அலி, புஸ்பா, பிரபாவதி, சரண்யா ஆகிய 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி கே.செல்வ ராஜ், கோமதி, புனிதமதி ஆகிய 4 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானவும் நிறைவே ற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    • பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மது விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (42) என்பவரை கைது செய்தனர்.

    பவானி போலீசார் நடத்திய சோதனையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த சின்னமணி (34) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, கோபி, மலையம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.
    • கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவரை பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபால், சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெ க்டர்கள், போலீ சார்கள் வரவே ற்றனர்.

    இதனை யடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

    அப்போது கடந்த 3 தினங்க ளுக்கு முன்பு ஈங்கூரில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி சென்று ரூ.23 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறி ந்தார்.

    அதேபோல் சென்னி மலை அருகே உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வீட்டு வாசலில் தூங்கி கொண்டி ருந்த விவசாயி மற்றும் அவரது மனைவி ஆகி யோரை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை கொ ள்ளை யடித்து சென்றனர்.

    இதில் விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த கொலை யாளிகள் குறித்து ஒரு வருடம் ஆகியும் போலீசா ருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    • தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.
    • அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அந்தியூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வெயிலின் தாக்க த்தை குறைத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

    குறிப்பாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், பூக்கடை கார்னர் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நின்றும் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.

    இது குறித்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் அந்தப் பகுதி மக்கள் தொலைபேசி மூலம் கூறினர். இதையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் குண சேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சிவலிங்கம் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வர வழைத்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்

    மேலும் தூய்மை பணி யாளர்கள் மூலம் மழை நீர் வடிகாலில் உள்ள அடை ப்புகளை சரி செய்து மழை நீர் வடிகாலில் செல்லும் வகையில் சரி செய்யப் பட்டது.

    குறுகலாக இருப்பதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழை நீர் வரும்போது அடைப்பு ஏற்பட்டு மழை நீர்ஆனது சாலையிலே தேங்கிநிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த மழைநீர் வடிகால் அங்கு அகலம் படுத்தும் படி அதி காரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அதனை சரி செய்வதாக அந்த பகுதி மக்களிடம் எடுத்து கூறி தண்ணீரை சரி செய்த பின்னரே அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ. சென்றார்.

    அப்போது அந்தப் பகுதி சேர்ந்த முத்து, நேரு, ஜிவா, செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

    • புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது.
    • இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கம்பம்:

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக்கொம்பன் மாவடி, வட்டதொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.

    இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் நடமாடி ஆக்ரோசத்துடன் சென்றது. அப்போது யானையை படம்பிடிக்க முயன்ற ஒருவரை தூக்கிவீசியது. உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார்.
    • ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார். பின்னர் அவர் காந்திஜி ரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    காந்திஜி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோடு என்பதால் அந்தப் பெண் நடுரோட்டில் அமர்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பொது மக்களும் கூடி விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் தானாக அங்கிருந்து நடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ் முன்பு அந்தப் பெண் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்களும், போலீசார் உடன் இணைந்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

    இதையடுத்து ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அங்கலட்சுமி என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    பின்னர் அவருக்கு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் இனி இவ்வாறு பொது இடங்களில் நடந்து கொள்ளக் கூடாது என அங்கலட்சுமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவயது.

    • சச்சிதானந்தம் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.
    • சச்சிதானந்தம் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற்று மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவரது வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டு முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது. இன்று காலை 10.20 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார்.
    • இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார். மேலும் கோபிசெட்டிபாளையம் வருகிறேன் என்றும் கூறி உள்ளார். அதற்கு அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்து சரண்யாவை கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்கு வர சொல்லி உள்ளார். மேலும் அங்கிருந்து உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

    இதை நம்பி இளம்பெண் சரண்யா கேரளாவில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்தார். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் காத்திருந்தும் முகநூல் காதலன் வரவில்லை. இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் இடுக்கி மாவட்டம் பெருமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் கோபிசெட்டிபாளையம் போலீசார் இளம்பெண் சரண்யாவை ஒப்படைத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாதவர்களுடன் பழகி இது போல் ஏமாற வேண்டாம் என்று சரண்யாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரண்யாவை திருமணம் செய்ய கோபிசெட்டிபாளையம் வரவழைத்த அந்த முகநூல் காதலன் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
    • கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 மாதமாகவே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்றும் இரவு நேரங்களில் மின்விசிறிகள் இயங்கினாலும் கடும் புழுக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை வருவதுபோல் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகரில் சுமார் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, சென்னிமலை, எலந்தக்குட்டை மேடு, பவானிசாகர் அணை பகுதி, குண்டேரிபள்ளம் அணை பகுதி, அம்மாபேட்டை மற்றும் அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பள்ளத்தாக்குகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    சக்கரப்பள்ளம் என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கி சென்றது. இதன் காரணமாக குரும்பூர் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பஸ் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடக்க முடியவில்லை. சுமார் 5 மணி நேரம் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    பின்னர் தண்ணீர் குறையத் தொடங்கியதும் 5 மணி நேரத்துக்கு பின்பு வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

    பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள சேனிடோரியம், துடுப்பதி, சீனாபுரம், வாய்க்கால் மேடு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றின் காரணமாக 3 இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பர்கூர்-கர்நாடகா செல்லும் சாலைகள் சேதமடைந்தது. மழையில் சாலைகள் அரித்து காணப்பட்டது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவுமில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-5, கோபிசெட்டிபாளையம்-7.20, பெருந்துறை-60, தாளவாடி-6.40, கொடுமுடி-31, மொடக்குறிச்சி-20, கவுந்தப்பாடி-15.60, சென்னிமலை-5, எலந்தக்குட்டை மேடு-25.20, பவானிசாகர் அணைப்பகுதி-6, குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதி-6, அம்மாபேட்டை-19

    மொத்தம் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 206.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பெருந்துறையில் 60 மில்லிமீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    • காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்கு மார் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு முன்னிலை வகி த்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்த லைவர் மகாவிஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.

    தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பண பலன்களை மீண்டும் வழங்க வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் அரசாணைகள் 115 ,139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    வருவாய் கிராம உதவியா ளர்களுக்கு அலுவலக உதவியாளர்க ளுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் வழங்க வேண்டும். 4 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வழங்க வேண்டும்.

    எய்ட்ஸ் கட்டு ப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    காப்பீட்டு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும். காலி பணியிட ங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாரபட்சத்தை கைவிட்டு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் சமையலர் உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • இன்று காலை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து விட்டது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஆனால் இன்று காலை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து விட்டது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 509 கனஅடியாக குறைந்து விட்டது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.54 அடியாக உள்ளது.

    பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.20 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.23 அடியாக உள்ளது.

    ×