search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் 2-வது நாளாக டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை
    X

    ஈரோட்டில் 2-வது நாளாக டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரி சோதனை

    • சச்சிதானந்தம் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.
    • சச்சிதானந்தம் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற்று மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவரது வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டு முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது. இன்று காலை 10.20 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×